மெட்ரோ ரயில் நிலையத்தில் கலை நிகழ்ச்சிகள்...களைகட்டும் 75-வது ஆண்டு சுதந்திர தினம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள். பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம், நாடு முழுவதும் நாளை உற்சாகமாகக் கொண்டாடவுள்ளது. இந்த மகத்தான தினத்தை, முன் எப்போதும் இல்லாத வகையில் வெகு விமர்சையாக கொண்டாட மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

75th Independence Day : Country Music Show at Chennai Metro Stations

பிரதமர் மோடி, அனைத்து வீடுகளிலும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனையடுத்து அனைத்து வீடு மற்றும் அலுவலகங்களில் இடங்களில் நேற்று முதல், தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 75-வது சுதந்திர தின கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. 4 நாள்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கிராமிய காலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ நிர்வாகத்தின் சார்பாக, அமுதம் பெருவிழா என்ற தலைப்பில், பாரம்பரியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேளதாளங்கள் முழங்க நாதஸ்வர இசையுடன் கூடிய கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், பறை உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு மதுரை கிராமிய கலை வளர்ச்சி மையத்தின் சார்பாக கலைஞர்கள் இதில் கலந்துகொண்டு பாரம்பரிய கலைகளை அரங்கேற்றினார். நாட்டுப்புறக் கலைஞர்களின் இந்த பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை, ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.

Recommended Video

    75th Independence Day | ஒரே கம்பத்தில் கட்சிக்கொடியும், தேசியக்கொடியும்.. *TamilNadu

    ஞாயிற்றுக்கிழமையான இன்று, கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்திலும், நாளை, அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலும் கிராமிய கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கிராமிய கலைகளும் பிரபலமாகும், சுதந்திர தினத்தை கொண்டாடவும் செய்துவிடலாம். அதேபோல, வருமானம் குறைவாக வரும் மெட்ரோவுக்கு இதன் மூலம் கூடுதல் விளம்பரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+