10th ரிசல்ட்..தமிழில் வெறும் 8 பேர் தான் செண்டம்..கணக்கு பாடத்தில் எத்தனை பேர் 100க்கு 100 தெரியுமா?
சென்னை : 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் தமிழில் 8 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றனர். அதிகபட்சமாக கணிதத்தில் 20ஆயிரத்து 691 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நிறைவடைந்தது. 4,107 மையங்களில் 9,08,000 மாணவ-மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருந்தனர்.

தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி 88 முகாம்களில் நடைபெற்றது. பின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியும் நிறைவடைந்தது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
அதன்படி தேர்ச்சி சதவீதமானது கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. பாடவாரியாக தமிழில் 8 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றனர். அதிகபட்சமாக கணிதத்தில் 20ஆயிரத்து 691 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களில் 96.85 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். ஆங்கிலத்தில் 91.15 சதவீதம், கணிதத்தில் 96.78 சதவீதம், அறிவியலில் 96.72 சதவீதம், சமூக அறிவியல் 9574 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் 30,646 மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். பாடவாரியாக பார்க்கும் பொழுது தமிழில் 8 மாணவர்களும், ஆங்கிலத்தில் 415 மாணவர்களும். கணிதத்தில் 20691 மாணவர்களும், அறிவியலில் 5104 மாணவர்களும், சமூக அறிவியலில் 4428 மாணவர்களும் 100% மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். தமிழில் வெறும் 8 மாணவர்கள் மட்டுமே 100% மதிப்பெண்கள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கணிதத்தில் அதிகபட்சமாக 20691 மாணவர்கள் 100% மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை மொத்தம் 13 ஆயிரத்து 510 மாற்றுத்திறனாளிகள் எழுதியிருக்கும் நிலையில் அவர்களில் 12,491 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். தேர்ச்சி சதவீதம் 92.45 சதவீதமாக இருக்கிறது.
இதே போல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மொத்தம் 260 சிறைவாசிகள் எழுதிய நிலையில் அவர்களின் 228 பேர் தேர்ச்சி பெற்று சதவீதம் 87.69% ஆக உள்ளது.
-
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications