Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மானியத்தில் முதலமைச்சரின் சோலார் பம்பு செட்.. விவசாயிகளுக்கு 80 சதவீத மானியம் தரும் சூப்பர் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோலார் பேனல்கள் மூலம் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நடைமுறை பல துறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், விவசாய துறையிலும் சோலார் நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு முதலமைச்சர் சோலார் பம்புசெட்டு மானிய திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.. இந்த திட்டம் குறித்து, சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. இது தொடர்பான அறிக்கையையும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கிறார்.

தமிழகத்தில் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தாலும், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கக் கூடிய சோலார் நடைமுறையும் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. இதற்கு காரணம், சுற்றுச்சூழலையும் பாதிக்காத வகையில் இந்த திட்டம் உள்ளதுதான்.

chief ministers solar power pump set Subsidy Tamil Nadu Government

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம்

அதனால்தான், சோலார் நடைமுறையை விவசாயத்திலும் பயன்படுத்த தமிழக அரசு முடிவெடுத்தது.. இதற்காகவே, 3 வருடங்களுக்கு முன்பு முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம் (Chief Minister's Solar Power Pump Set Subsidy Scheme) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியும் வருகிறது.

கிணற்றுப் பாசனத்திற்கு மின்சாரத் தேவை அதிகரித்து வரும் நிலையில், சூரிய சக்தியை சோலார் பேனல்கள் மூலம் மின்சாரமாக தயாரித்து, அதை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் சோலார் பம்புசெட்டுகள் அமைத்து தரப்படுகின்றன. இதனால் பகல் நேரத்தில் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரை தடையற்ற மின்சாரத்தை பெற்று, கிணற்றுப் பாசனத்தையும் விவசாயிகளால் எளிதாக மேற்கொள்ள முடியும்.

ஆவணங்கள் என்னென்ன தேவை

இந்த திட்டத்தின் பலனை பெற வேண்டுமானால், ஏற்கனவே கிணறு அமைத்து மின் இணைப்பு இல்லாமல் டீசல் எஞ்சின் மூலம் பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகளாக இருக்க வேண்டும்... ஒருவேளை புதிதாக கிணறு அமைத்து இருந்தால், அது அரசு வரையறுத்துள்ள நிலநீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் இருந்தால் மட்டுமே பயன்பெற முடியும்.

எனவே, ஆதார் கார்டு, சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், சொந்த நிலத்திற்கான சிட்டா மற்றும் அடங்கல் ஆதி திராவிட, பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால் சாதிச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை வைத்திருக்கும் விவசாயிகள் https://pmkusum.tn.gov.in, https://mis.aed.tn.gov.in, https://aed.tn.gov.in என்ற வெப்சைட்டிலோ அல்லது உழவன் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

சிறு குறு விவசாயிகளுக்கு 80% மானியம்

இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறார்.. அதில், "விவசாயிகள் நீர்ப் பாசனத்திற்கான மின்சாரத் தேவையினை பெறுவதற்கு, முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்கீழ் மின் கட்டமைப்புடன் சாராத, தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் ஒன்றிய அரசின் வரையறுக்கப்பட்ட விலையில் அரசு மானியத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது.

சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் மூலம் மின் இணைப்பின்றி பகலில் சுமார் 8 மணிநேரம் வரை பாசனத்திற்காக தடையில்லா மின்சாரத்தினை பெற முடியும்.

தகுதிகள் - நிபந்தனைகள்

மின் இணைப்பு இல்லாத, பாசன ஆதாரமுள்ள தனிநபர் விவசாயிகள் மற்றும் மின் இணைப்பு இல்லாத. பாசன வசதிக்கான சமுதாயக் கிணறு அமைத்துள்ள விவசாய குழுக்கள் தகுதியானவர்களாகும். புதியதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள், நிலநீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் இருத்தல் வேண்டும்.

ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தல் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில், அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்துக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் மூலம் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு, விவசாயிகளுக்கு 80% மானியத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

70 சதவீதம் மானியம்

மேலும், பொதுப் பிரிவினைத் சார்ந்த சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த இதர விவசாயிகளுக்கு 70% மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 60% மானியத்தில் வழங்கப்படுகிறது.

மேலும், இத்திட்டம் தொடர்பாக முழு விபரங்களை பெற்று பயனடைய வேளாண்மைப் பொறியியல் துறையின் சேலம் மாவட்ட செயற் பொறியாளர் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் உள்ள சேலம் மேட்டூர், ஆத்தூர் மற்றும் சங்ககிரியில் செயல்படும் உதவி செயற் பொறியாளார் அலுவலகம் அல்லது வட்டார அளவில் உதவி பொறியாளர் அல்லது இளநிலை பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+