உதவி ஆணையர்கள், டி.எஸ்.பி.க்கள் 9 பேர் தேர்தல் அல்லாத பணிகளுக்கு இடமாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி!
சென்னை: தேர்தல் ஆணைய காவல்துறை சிறப்பு பார்வையாளர் தந்த தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் உதவி ஆணையர்கள், டி.எஸ்.பி.க்கள் 9 பேர் தேர்தல் அல்லாத பணிகளுக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் அன்பரசன் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதே போல் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர்கள் வேல்முருகன், கிருஷ்ணமூர்த்தி தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை வடக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் கோவிந்தராஜா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென் மண்டல ஐ.ஜி. முருகனை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பொருளாதார குற்றப்பிரிவு வளவன், வேலூர் மதுவிலக்கு பிரிவு அதிகாரி திருநாவுக்கரசு, விழுப்புரம் மாவட்ட பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரி ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்ட குற்ற ஆவண காப்பக அதிகாரி சுபாஷ், திருச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவு அதிகாரி கோபாலன் சந்திரன் ஆகியோரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு தேர்தல் தொடர்பான எந்த பணியும் ஒதுக்கப்பட கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications