9 வயது சிறுவனுக்கு இருதயநோய்.. அறுவை சிகிச்சை செய்தால்தான் காப்பாற்ற முடியும்! ஹெல்ப் பண்ணுங்க
சென்னை: சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த 4 ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுவனுக்கு இதயத்தில் சிக்கலான நோய் பாதிப்பு உள்ளது. பிறவியிலேயே இருந்த இந்த பாதிப்புக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே, ஏழை குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ரையான் அறுவை சிகிச்சை செலவுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
சென்னை பூந்தமல்லியில் உள்ள ஆர்சிஎம் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் முகம்மது ரையான். 9 வயதே ஆன சிறுவனான ரையான் தனது வயதுக்கேற்ற குறும்புத்தனம் மற்றும் துடிப்புமிக்க சிறுவனாக பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி இருந்து வருகிறான். ரையானுக்கு சமீப காலமாக உடல் நிலை சரியில்லை. அவனுக்கு தீவிர இதய நோய் பாதிப்பு உள்ளது.

துவக்க காலத்த்தில் இந்த பிரச்சினை தானாகவே சரியாகிவிடும் என்று பெற்றோர்கள் நினைத்தனர். சிறுவனுக்கு இருதயத்தில் (ASD) பகுதியில் ஸ்டண்ட் ஒன்று பொருத்தப்பட்டது. 5 அல்லது ஆறு வயது இந்த இதயத்தில் உள்ள ஒட்டை தானாக சரியாகிவிடும் என்று கருதினார்கள். ஆனால், இது தானாக குணம் ஆகவில்லை. எனவே சிறுவனின் உயிரை காப்பாற்ற அவசரமாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.
மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிசைக்கு ஐசியூ கட்டணம், மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான கட்டணம் என அனைத்துக்கும் சேர்த்து ரூ.2 லட்சம் தேவைப்படுகிறது. ரையானின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அவனது தந்தை ஷாரிப் ஹோட்டல் ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவருக்கு தினமும் ரூ.500 சம்பளமாக கிடைக்கும்.
இந்த வருமானத்தை வைத்து அவரது குடும்ப செலவுகளை ஈடுகட்டவே முடியவில்லை. போதாக்குறைக்கு அவரது மனைவியும் மன நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். அவரது குடும்ப சூழலை வைத்து பார்த்தால் சிறுவன் ரையானின் சிகிச்சைக்கு அவர்களால் பணம் புரட்ட முடியாது.
எனவே, சிறுவன் ரையான் ஆரோக்கியமாக வாழ உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். துடிப்பு மிக்க சிறுவன் ரையான் ஆரோக்கியமாக வாழ்ந்து வாழ்வில் பல உயர்ந்த லட்சியங்களை எட்ட நீங்கள் உதவுங்கள். உங்களால் எவ்வளவு பணம் உதவியாக அளிக்க முடியோ.. அதை கொடுத்து உதவுங்கள். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு உதவியும் விலை மதிப்பு மிக்கதாக இருக்கும்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications