மனித குலம் காணாத புது ஒட்டுண்ணி.. சீனாவில் ஷாக்.. வவ்வால்களிடம் கண்டுபிடிக்கப்பட்ட 20 புது வைரஸ்கள்!
சென்னை: சீனாவில் வவ்வால்களிடம் இருந்து 20 புதிய வைரஸ்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஹெனி வைரஸ்கள் எனப்படும் கொடிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இதற்கு முன் மனித குலம் அறிந்திராத புதிய ஒட்டுண்ணி ஆகியவற்றையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவை பழங்கள் அல்லது நீர் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடும் என்ற கவலையை சீன ஆராய்ச்சியாளர்கள் எழுப்பி உள்ளனர்.
வவ்வால்களிடம் புதிய வைரஸ்கள் கண்டுபிடிப்பு
சீனாவின் யுனான் மாகாணத்தில் வவ்வால்களிடம் இருந்து 20 புதிய வைரஸ்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ்களில் இரண்டு, உயிருக்கு ஆபத்தான ஹென்ட்ரா மற்றும் நிபா வைரஸ்களைப் போன்ற மரபணு அமைப்பைக் கொண்டுள்ளன. இந்த வைரஸ்கள் இதற்கு முன்பு மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கடுமையான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வானது PLOS Pathogens என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 2017 முதல் 2021 வரை 142 வவ்வால்களின் சிறுநீரக திசு மாதிரிகளைச் சேகரித்து, மரபணு சோதனை மூலம் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் முன்பு அறிந்திராத ஒரு புதிய ஒட்டுண்ணி ஆகியவற்றையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆய்வின் முக்கியத்துவம்
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சில வைரஸ்கள் வவ்வால்களின் சிறுநீரகங்களில் காணப்பட்டன. வவ்வால்கள் பழத்தோட்டங்கள் அல்லது நீர்நிலைகளுக்கு அருகில் சிறுநீர் கழிக்கும்போது, சிறுநீரானது பழங்கள் அல்லது நீரில் கலக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அந்தப் பொருட்கள் மாசு அடைந்து, அவற்றை உண்ணும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு நோயியல் ஆராய்ச்சியாளர்கள் இது குறித்துக் கூறுகையில், "இந்த வைரஸ்கள் பெரும்பாலும் வவ்வால்களின் சிறுநீரகங்களில் காணப்பட்டன. இதன் காரணமாக மாசுபட்ட பழங்கள் அல்லது நீர் மூலம் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது" என்றார்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு ஹெனி வைரஸ்களுக்கும் யுனான் வவ்வால் ஹெனி வைரஸ் 1 மற்றும் 2 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ்கள், ஹென்ட்ரா மற்றும் நிபா வைரஸ்களுடன் 52% முதல் 57% வரை மரபணு ஒற்றுமையைக் கொண்டுள்ளன. இந்த வைரஸ்கள் இதற்கு முன்பு மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மூளை தொற்று மற்றும் அதிக இறப்பு விகிதங்களை ஏற்படுத்தியுள்ளன.
வவ்வால்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்
இந்த ஆய்வில் உள்ள வவ்வால்கள் யுனான் கிராமப்புறங்களில் உள்ள பழத்தோட்டங்களுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் அவற்றின் சிறுநீர் பழங்களில் கலக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் வைரஸ் வவ்வால்களில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது.
வவ்வால் சிறுநீரகங்கள் ஏன் ஆய்வு செய்யப்பட்டன?
வவ்வால் வைரஸ்கள் குறித்த முந்தைய ஆய்வுகள் வவ்வால்களின் மலத்தில் கவனம் செலுத்தின. ஆனால் இந்த ஆய்வானது, வவ்வால்களின் சிறுநீரகங்களில் என்ன வகையான வைரஸ்கள் மற்றும் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன என்பதைக் கண்டறிய அவற்றின் உள்ளே ஆய்வு செய்தது. சிறுநீரகங்கள் நோய்கள் பரவுவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதால், வவ்வால்களின் உயிரியலின் இந்த பகுதி அதிகம் ஆராயப்படவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வவ்வால்கள் எபோலா, சார்ஸ், மெர்ஸ் மற்றும் கோவிட்-19 போன்ற நோய்களைப் பரப்புவதில் தொடர்புடையவை. இந்த வைரஸ்கள் நேரடியாகவோ அல்லது விலங்குகள் மூலமாகவோ, பெரும்பாலும் வவ்வால் கழிவுகளால் மாசுபட்ட உணவு அல்லது நீர் மூலம் மனிதர்களை அடைகின்றன.
பிற புதிய உயிரினங்கள்
22 வைரஸ்களுக்கு அதிகமாக (அதில் 20 முற்றிலும் புதியவை), விஞ்ஞானிகள் ஒரு புதிய ஒட்டுண்ணியையும் கண்டுபிடித்தனர். அதற்கு Klossiella yunnanensis எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பொதுவான பாக்டீரியா இனங்களையும் கண்டுபிடித்தனர். அதில் ஒன்று இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்படாதது. அதற்கு Flavobacterium yunnanensis எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்புகள் வவ்வால்கள் பல்வேறு வகையான நுண்ணுயிரிகளை சுமக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. அவற்றில் பலவற்றை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை... அதை பற்றி நமக்கு எதுவும் தெரியாது என்றுள்ளார்
ஆய்வின் நோக்கம்
வவ்வால்களின் மலத்தில் உள்ள நுண்ணுயிரிகளை மட்டும் ஆய்வு செய்யாமல், அவற்றின் உடலில் உள்ள முழு நுண்ணுயிரிகளையும் ஆய்வு செய்வது ஏன் முக்கியம் என்பதை இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. சிறுநீரகங்கள் போன்ற வவ்வால் கழிவுகளில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்களைக் கணிக்கவும் தடுக்கவும் விஞ்ஞானிகளுக்கு உதவும்.
யுனான் பிராந்தியத்தின் காலநிலை மலேசியா போன்ற நிபா வைரஸ் பரவிய பகுதிகளின் காலநிலையைப் போன்றே உள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளைக் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்று கூறி உள்ளனர். விலங்குகளிடம் புதிய வைரஸ்கள் மனிதர்களை அடைவதற்கு முன்பு அவற்றின் பரவலைக் கண்காணிக்க இதுபோன்ற ஆய்வுகள் தேவை என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
வவ்வால்களிடம் இருந்து கண்டறியப்பட்ட இந்த புதிய வைரஸ்கள், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய நோய் பரவல் அபாயத்தை உணர்த்துவதோடு, இது குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறது.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி












Click it and Unblock the Notifications