சென்னை தாம்பரத்தில் சோகம்.. வீட்டின் முன் விளையாடிய 3 வயது குழந்தை வாகனம் மோதி மரணம்!
சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூரில் டாடா ஏசி வாகனம் மோதியதில் 3வயது குழந்தை பரிதாபமாக உயிரிழ்ந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் மதுரகவியாழ்வார் தெருவில் வசிப்பவர் கார்த்திகேயன். கூலித்தொழிலாளி இவர் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தை வீட்டுக்கு வெளியே நிறுத்தி இருந்தார்.

இவரது 3 வயதுடைய குழந்தை சிவலிங்கம் வெளியே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி நின்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக சிலிண்டர்களை ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனம் அங்கு நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை உரசியதால் குழந்தை தடுமாறி கீழே விழுந்தான்.
இதில் குழந்தை படுகாயம் அடைந்தான். இதை பார்த்த டாட்டா ஏசி ஓட்டுநர் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில் அடிபட்ட குழந்தையை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது அந்த குழந்தை இறந்து விட்டது என கூறியதால் அப்பகுதியில் பதற்றம் நீடித்தது.
இது சம்பந்தமாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்தை ஏறபடுத்திவிட்டு தப்பிய அந்த இளைஞர் பெயர் ரமேஷ் என்பதும் பெருங்களத்தூர் அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications