திடீர் சத்தம்.. 3 முறை புரண்டு கவிழ்ந்த கார்.. நேப்பியர் பாலம் அருகே அதிகாலை நேரத்தில் அதிர்ச்சி!
சென்னை: சென்னை நேப்பியர் பாலம் அருகே இன்று அதிகாலை கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
மயிலாப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமணகரன் ஓட்டி வந்த கார், டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்தில் சிக்கியது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பெண்மணியும், அவரது மகனும் திருவண்ணாமலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். ரமணகரன் என்ற கல்லூரி மாணவர் காரை ஓட்டி வந்த நிலையில் சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது.
இதையடுத்து கார் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு தடுப்புச்சுவரில் மோதி, 3 முறை புரண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள், காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
நல்வாய்ப்பாக, காரில் இருந்த ரமணகரன் மற்றும் அவரது தாயார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் கார் டயர் வெடித்து கார் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, இந்தியாவிலேயே சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து தமிழ்நாடு முதல் இடத்தில் இருந்துள்ளது.
தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிகம் பதிவான மாவட்டங்கள் சென்னை மற்றும் கோவை தான். 2023 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் கோவையில் தலா 3,642 விபத்துகள் பதிவான நிலையில், சென்னையில் 500 பேரும், கோவையில் 1,040 பேரும் விபத்துகளில் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications