Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் பிரிவில் வழக்கு பதிவு.. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜி மீது பணமோசடி பிரிவில் ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊழல் தடுப்பு பிரிவில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 13 ஆம் தேதி கைது செய்துள்ளனர். தற்போது உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் செந்தில் பாலாஜி மீதான வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 A case has been registered against Minister Senthil Balaji in the corruption department

இதற்கிடையே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை விரைவுப்படுத்தி உள்ளனர். அதாவது கடந்த 2014 - 2015-ம் ஆணடு வரை போக்குவரத்து துறையில் பணியமர்த்தப்பட்ட 1500 பேரிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக 300 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் நீங்கள் பணியமர்த்தப்பட்டது எப்படி என்றும், நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் என்ன என்பது குறித்தும் அவர்களிடம் வாக்குமூலம் பெற முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீது ழக்கு பதிவு செய்துள்ளனர். செந்தில் பாலாஜி மீது பணமோசடி பிரிவில் ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஊழல் தடுப்பு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+