உஷார்.. டெல்டா + ஓமைக்ரான்.. இரண்டும் கலந்த கலவை! தமிழ்நாட்டில் 90 பேருக்கு பாதிப்பு.. அறிகுறி என்ன?
சென்னை: கொரோனா மாதிரிகளான டெல்டாவும் ஓமைக்ரானும் சேர்ந்து உருவான புதிய மாதிரியான டெல்டாக்ரான் வைரஸால் தமிழ்நாட்டில் 90 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஓமைக்ரான் பரவலின் வேகம் இந்தியாவில் குறைந்த நிலையில் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் டெல்டாக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இந்தியாவில் மட்டும் 568 பேருக்கு டெல்டாகிரான் மாதிரி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே டெல்டாகிரானால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கர்நாடகாதான். அங்கு மட்டும் 221 பேருக்கு டெல்டாகிரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 90 பேருக்கு தொற்று உறுதி
டெல்டாகிரான் வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் கர்நாடகாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது தமிழ்நாடு. இங்கு இதுவரை 90 பேரிடம் டெல்டாகிரான் மாதிரி தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மகாராஷ்டிராவில் 66 பேருக்கும் குஜராத்தில் 33 பேருக்கும், மேற்கு வங்கத்தில் 32 பேருக்கும், தெலுங்கானாவில் 25 பேருக்கும், டெல்லியில் 20 பேருக்கும் டெல்டாகிரான் உறுதியாகி உள்ளது.

என்ன அறிகுறி?
டெல்டாகிரான் மாதிரி கொரோனா வைரஸ் கணித்ததைபோலவே அதிதீவிர வேகத்தில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் பிரிட்டன் மருத்துவ அறிஞர்கள், அதிக உடல் வெப்பத்துடன் கடுமையான காய்ச்சல் இருக்கும் எனவும், சாதாரணமாக தொடுவதன் மூலமே உடல் சூட்டை உணர முடியும் என தெரிவித்துள்ளனர்.

கடுமையான இருமல்
அதுபோல் இதுவரை வந்த கொரோனா மாதிரிகளை விட இது அதிக இருமலை ஏற்படுத்தும் என்றும், ஒரு மணி நேரத்துக்கும் மேல் தொடர் இருமல், ஒரு நாளைக்கு மூன்று முறை இதுபோல் நடக்கும் எனவும் கூறியுள்ளனர். சுவைக்கும் திறன் மற்றும் நுகரும் திறன் செயலிழக்கவோ அல்லது மாற்றமடையவோ செய்யும் என மருத்துவ அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.

டெல்டாகிரான் கண்டுபிடிக்கப்பட்ட கதை
பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் பிரான்ஸை சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவரிடம் இருந்து பெறப்பட்ட சளி மாதிரியை ஆய்வு செய்த பாரிஸில் உள்ள பாடெர் ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள், அதன் மரபணு டெல்டாவை ஒத்து இருந்ததையும், வெளித்தோற்றம் ஓமைக்ரான் போல் இருந்ததையும் கண்டுபிடித்தனர். ஒரே பகுதியில் ஒரே காலக்கட்டத்தில் இருவேறு மாதிரிகள் பரவும்போது இதுபோல் இணைந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் பிலிப் கால்சன். இதேபோன்று மேலும் 2 இணைவு கொரோனா வைரஸ் மாதிரிகளும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சித் தகவலையும் அவர் கூறி இருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications