"அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி தாக்குதல்!" ஓபிஎஸ் மீது போலீசில் புகார்! உச்சக்கட்ட பதற்றம்
சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தற்காலிக பொதுச்செயாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த 4 மாதங்களில் பொதுச்செயாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் பொதுச்செயாளர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

ஓபிஎஸ்
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்றது. இவை எல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டு இருக்க மறுபுறம் அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை முதலே பெரும் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. எடப்பாடி பழனிச்சாமி வானகரம் சென்ற நிலையில், அதற்குப் போட்டிப் போடும் வகையில் அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி ஓ. பன்னீர் செல்வம் வாகனம் சென்றது.

பதற்றம்
அப்போதே ஓபிஎஸ் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. அவ்வை சண்முகம் சாலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் வாகனம் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே கற்கள் வீசி தாக்குதல் நடத்தி இருந்ததால் ஓ.பன்னீர் செல்வத்திற்கு போலீசார் பாதுகாப்பு வழங்கினர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான ஒரு சூழல் உருவானது. இதையடுத்து அங்கு அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கற்கள் வீச்சு
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்தை உள்ளே விட மறுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தகராறு செய்தனர். ஒருகட்டத்தில் இது தள்ளுமுள்ளாக மாறி, வன்முறையும் ஏற்பட்டது. பூட்டப்பட்டிருந்த அதிமுக அலுவலகத்தை உடைத்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்துவிட்டனர். மேலும், தொண்டர்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசியும் தாக்கிக் கொண்டனர்.

புகார்
இந்தச் சூழலில் அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது. அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, இதனால் அங்குச் சற்று சலசலப்பு உருவாகி உள்ளது.
-
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா?












Click it and Unblock the Notifications