அண்ணா நகரில் நடுராத்திரியில் பறந்த ட்ரோன்.. அடுக்குமாடி வீடுகளின் ஜன்னலை நோட்டமிட்டதால் பரபரப்பு
சென்னை: சென்னை அண்ணா நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல்களை நோட்டமிட்டு டிரோன் ஒன்று பறந்து சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.. இதனிடையே அந்த ட்ரோனை பிடித்த பொதுமக்கள் யார் இப்படி செய்தது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள்.
சென்னை அண்ணா நகர் கிழக்கு பகுதியில் உள்ள 'என்' பிளாக், 24-வது தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கு ஏராளமான மக்கள் வசிக்கிறார்கள். இந்த குடியிருப்பிற்கு கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு இந்த குடியிருப்புகளை நோட்டமிட்டபடி ட்ரோன் ஒன்று பறந்தது. அந்த டிரோன், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் உள்ள ஜன்னல்களை நோட்டமிட்டவாறு பறந்து சென்று கொண்டிருந்தது.

அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் வீட்டின் ஜன்னல் வழியாக அந்த டிரோன் பறந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதேநேரம் லாவகமாக அந்த ட்ரோனை கையால் அவர் எட்டி பிடித்தார். பின்னர் ஜன்னல் வழியாக கீழே பார்த்தபோது அங்கு 2 மர்மநபர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
அவர்கள், இந்தியில் பேசிய படி ட்ரோனை கேட்டதாக சொல்லப்படுகிறது, அதற்கு அந்த நபர் கீழே இறங்கி வர முயற்சித்தார்.. அப்போது அந்த மர்ம நபர்கள் இருவரும் ட்ரோனை அங்கேயே விட்டு விட்டு இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார்கள்
நள்ளிரவு நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல்களை நோட்டமிட்டவாறு பறந்த டிரோன் பிடிக்கப்பட்டது. இதை அறிந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இந்த ட்ரோனை பறக்க விட்டனரா? வீடுகளில் ஆட்கள் இருக்கிறார்களா? என்பதை நோட்டமிட இதுபோல் டிரோனை பறக்கவிட்டார்களா? அல்லது வீடுகளில் படுக்கை அறைகளில் பெண்களை ஆபாசமாக படம் பிடிக்கும் நோக்கத்துடன் இதுபோல் செய்தார்களா? என்ற கேள்விகள் எழுகிறது. பிடித்து வைக்கப்பட்ட டிரோனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, போலீசில் புகார் அளித்தால் மட்டுமே என்ன காரணத்துக்காக அவர்கள் டிரோனை பறக்கவிட்டனர்? என்பது தெரியவரும் என்பதால் அண்ணா நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications