மெடிக்கலுக்கு போன தமிழ் எழுத்தாளரை 'ஸ்டன்னாக்கிய' போலீஸ்
சென்னை: தமிழகத்தில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அவர் லேசுப்பட்ட எழுத்தாளர் இல்லை. சாகித்திய அகாடமி விருது வாங்கியவர். ஆனால் லாக்டவுனால் வீட்டுக்குள் முடங்கி கிடக்க வேண்டிய நிலை.
எனவே, பொடிநடையாக, வீட்டு ஏரியாவிலுள்ள ஒரு மெடிக்கலுக்கு சென்றுள்ளார். அங்குதான் போலீசார், அவரை வழிமறித்துள்ளனர். எங்கே போறீங்க என போலீஸ் கேட்க, மெடிக்கலுக்குத்தான் என்று சொல்லியுள்ளார் நம்ம எழுத்தாளர்.

ஆனால் போலீஸ் நம்பவில்லையாம். பொய்யா பேசுறீங்க.. உங்க மேல கேஸ் போடப்போறோம் என்று சொல்லியதாம் போலீஸ். ஆனால், நான் ஒரு ரைட்டர் என சொல்லியுள்ளார். அப்படியும் போலீஸ் விடவில்லையாம்.
அதனால், மேலதிகாரி ஒருவருக்கு போன் போட்டு கொடுத்துள்ளார். அவரும், பணியிலிருந்த போலீசாரிடம், "அவர் ஒரு ரைட்டர்.. விட்டுருங்க" என பரிந்துரைத்துள்ளார். இதன்பிறகுதான், அங்கிருந்த போலீசார் சரி கிளம்புங்கள் என்று சொல்லியுள்ளனர்.
ஆனால், இதைக்கூட அந்த எழுத்தாளர் பொறுத்துக் கொண்டார். கிளம்பி போற நேரத்தில் அங்கே நின்ற போலீஸ்காரர், "சார்.. நீங்க எந்த ஸ்டேஷன்ல ரைட்டரா இருக்கீங்க" என்று கேட்டாரே பார்க்கலாம் ஒரு கேள்வி. எழுத்தாளர் ஆடிப்போய்விட்டாராம்.
என்னடா இது தமிழ் எழுத்தாளர்களுக்கு வந்த சோதனை என நொந்தபடி வீடு போய் சேர்ந்துள்ளார் அவர். தனது நண்பர்களிடம் இந்த சம்பவத்தை அவர் சொல்ல, அது இப்போது மெல்ல மெல்ல கசிந்து பரபரப்பு பேச்சுகளுக்கு காரணமாகியுள்ளது.
அண்டை மாநிலமான, கர்நாடகா, கேரளா போன்றவற்றில் எழுத்தாளர்களுக்கு அப்படி ஒரு சமூக அங்கீகாரம் இருக்கிறது. ஆனால், தமிழகத்திலோ, ரைட்டர் என்றால், போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் என புரிந்து கொள்ளும் அளவுக்குத்தான் உள்ளோமா என்பதுதான் இந்த சம்பவத்தில் தொக்கி நிற்கும் கேள்வி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications