Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்தவச்சுட்டியே பரட்டை .. சென்னை டிராபிக் போலீசுக்கு மறக்க முடியாத பரிசு.. நெட்டிசன் செஞ்ச வேலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வாகன ஓட்டிகள் யாராக இருந்தாலும் கவனமாக செல்ல வேண்டும். குறிப்பாக போலீஸ் என்றாலோ அல்லது போக்குவரத்து போலீஸ் என்றாலோ ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஹெல்மட் போடாமல் சென்றதாக போலீஸையே போட்டோ எடுத்து சிக்க வைத்துள்ளார்கள் நம்ம நெட்டிசன்கள்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மற்ற ஊர்களை போல் இல்லை.. இங்கு யாராவது போக்குவரத்து விதிகளை மீறினால் ஆன்லைனிலேயே கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. இதுதவிர பொதுமக்களும் போக்குவரத்து விதிமீறல்களை யார் செய்தாலும் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து அனுப்பி சென்னை போக்குவரத்து போலிசிடம் ட்விட்டரில் புகார் அளிக்கலாம்.

A fine of Rs 500 likely imposed on a traffic police for driving a bike without helmet in Chennai

அப்படி புகார் அளித்தால் , சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உண்மையில் விதிமீறல் நடந்ததா என்பதை கண்டுபிடித்து அபராதமும் விதிக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. சென்னை மாநகர பகுதிகளில் வெற்றிகரமாக பின்பற்றப்படும் இந்த நடைமுறை காரணமாக இரவில் போலீஸ் இல்லை என்று யாரும் ஹெல்மெட் போடாமல் போக முடியாது. அதேபோல் மூன்று பேர் ஒரே வாகனத்தில் போக முடியாது. பள்ளிக்கு குழந்தைகளை விடக்கூட ஹெல்மெட் அணியாமல் போக முடியாது.ஏனெனில் யாராவது புகைப்படம் எடுத்துபுகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை உறுதி.

சென்னை போலீசார் தினமும் ஏராளமானோரின் புகார்களுக்கு இப்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சென்னையில் இந்த ஆன்லைன் அபராத நடவடிக்கை, பொதுமக்களுக்கு மட்டுமல்ல, போலீசுக்குமே சமயத்தில் அபராதம் விதிக்க வைக்கிறது. அண்மையில் சென்னை திருவல்லிக்கேணி ஜாபர்கான்பேட்டையில் டிராபிக் போலீஸ் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன், புகைப்படம் எடுத்து சென்னை போக்குவரத்து போலீசிடம் புகார் அளித்தார். அந்த புகாருக்கு பதில் அளித்த சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்துள்ளனர்.இதன் மூலம் அந்த போலீசாருக்கும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

மற்ற ஊர்களில் இல்லாத அல்லது பின்பற்றப்படாத போக்குவரத்து நடைமுறைகளை இங்கு பார்ப்போம். சென்னையில் மட்டும் தான் பொதுமக்களின் புகார்களை ஏற்று வாகன விதிமீறல்களுக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது.இதேபோல் சென்னையில் மட்டும் சிக்னலுக்கு சிக்னல் துள்ளியமான கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சிக்னலில் தானியங்கி அபராதம் விதிக்கும் கேமராவும் உள்ளது. சிக்னலை மீறி செல்வோருக்கு இந்த கேமராக்கள் அபராதம் விதிக்கின்றன.

மற்ற ஊர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்தாலே அபராதம் விதிக்காமல் வண்டியை விட்டுவிடுவார்கள். ஆனால் சென்னையில் வாகனம் ஓட்டுபவர், பின்னாடி அமர்ந்திருப்பவர் இருவருமே ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும்.அப்போது தான் அபராதத்தில் இருந்து தப்பிக்க முடியும். மற்ற ஊர்களில் ஒருவழிப்பாதையில் சென்றால் பெரிய அளவில் சிக்கல் இருக்காது.

ஆனால் சென்னையில் ஒருவழிப்பாதையில் சென்றால் கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள். அதேபோல் சிக்னல் கோட்டை தாண்டி நின்றாலோ, பாதசாரிகள் செல்லும் பாதையில் ஏறி சென்றாலோ அபராதம் உறுதியாக விதிப்பார்கள். கண்ட இடத்தில் பார்க்கிங் செய்தால் கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள். இதுதவிர வார இறுதியில் மதுபோதையில் சென்னையில் ஒரு கிலோமீட்டர் கூட சுற்றிவர முடியாது. சுற்றினால் அவர்களுக்கு 10 ஆயிரம் அபராதம் விதிப்பார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+