130 நாடுகளின் தேசிய கீதங்களை அச்சு பிசகாமல் பாடி உலக சாதனை.. அசத்திய சென்னை திருவொற்றியூர் மாணவி!
சென்னை: சென்னையைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி சுபிக்ஷா, 130 நாடுகளின் தேசிய கீதங்களை, ஸ்ருதி மாறாமல், அந்தந்த மொழிகளிலேயே பாடி, உலக சாதனை படைத்து, அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த எட்டம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி சுபிக்ஷா, நல்ல நினைவு ஆற்றல் கொண்டவராக திகழ்ந்து வருகிறார். மாணவி சுபிக்ஷா, ஏற்கெனவே சுப்ரபாதம் முழுவதையும் மனப்பாடும் செய்து சிறப்பாக பாடி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வந்துள்ளார். தனது மகளின் அபார ஆற்றலைக் கண்டு பிரமித்த அவரின் தாய், இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையை தனது மகள் படைக்க வேண்டும் என எண்ணினார்.

உலக தேசிய கீதங்கள் மனப்பாடம்
இதனையடுத்து, உலக நாடுகளின் தேசிய கீதங்களை தேர்ந்தெடுத்து, அந்த மொழிகளில் உள்ள ராகம், உச்சரிப்புகளுடன் பாடுமாறு தனது மகளுக்கு ஊக்கப்படுத்தினர். தாயின் ஊக்கத்தால் உற்சாகமடைந்த மாணவி சுபிக்ஷா, தனது நினைவாற்றலால், உலக நாடுகளின் தேசிய கீதங்களை மனப்பாடம் செய்து பாடி பயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்ட மாணவி, 195 நாடுகளின் தேசிய கீதங்களை மனப்பாடமாக பாடும் திறனை வளர்த்துக்கொண்டு, தனது பெற்றோருக்கு பெருமை சேர்த்தார்.

130 நாடுகளின் தேசிய கீதங்கள்
இந்நிலையில், 195 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி, திருவொற்றியூரில் உள்ள நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்ட மாணவி சுபிக்ஷா, காலை 10 மணியிலிருந்து, மாலை 4 மணி வரை இடைவிடாது, 130 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்தினார். 130 நாடுகளின் தேசிய கீதங்களை ஸ்ருதி மாறாமல், அந்தந்த மொழிகளில் பாடி, மாணவி சுபிக்ஷா உலக சாதனை படைத்தார்.

மாணவிக்கு குவியும் பாராட்டு
இந்த உலக சாதனை நிகழ்ச்சியில், திருவொற்றியூரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியின் தாளாளர் ரங்கநாதன், சமூக ஆர்வலர் ஜி. வரதராஜன், தொழிற்சங்க தலைவர் துரைராஜ், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உலக சாதனை படைத்த மாணவி சுபிக்ஷாவை அனைவரும் மனதார பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். 130 நாடுகளின் தேசிய கீதங்களை ஸ்ருதி மாறாமல், அந்தந்த மொழிகளில் பாடி உலக சாதனை படைத்த பள்ளி மாணவி சுபிக்ஷாக்கு, பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மாணவியின் பெற்றோர் மகிழ்ச்சி
தங்கள் மகளின் திமையை அறிந்து, அவரை ஊக்கப்படுத்தியதாக தெரிவித்த மாணவி சுபிக்ஷாவின் பெற்றோர், தனது மகள் கல்வியிலும் சிறந்து விளங்கி வருவதாக பெருமிதம் தெரிவித்தனர். நினைவாற்றால் அதிகமாக இருந்ததால், சாதனை படைக்க தனது மகள் விரும்பியதாகவும், அதன்பேரில் அவரை ஊக்கப்படுத்தியதாக தெரிவித்தனர். மகள் சாதனை படைக்க உதவிய பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் மாணவி சுபிக்ஷாவின் பெற்றோர் குறிப்பிட்டனர்.
-
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க!












Click it and Unblock the Notifications