மாதத்தில் இது மாதிரி ஒரு நாள் வாழ்ந்தாலே போதுமே! சினேகன் வீட்டில் கனிகா என்ன செய்கிறார் பாருங்க!
சென்னை: மாதத்தில் இது மாதிரி ஒரு நாள் இல்ல, ஆண்டுக்கு ஒரு நாளாவது இந்த மாதிரி வாழ்ந்தால் இன்பம் கிடைக்குமே!
கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் இன்றைய அவசர உலகத்தில் தேய்ந்து சிறிய குடும்பம் ஆகிவிட்டது. அந்த காலத்தில் தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, மாமா, அத்தை உள்ளிட்டோருடன் குழந்தைகள் வளர்ந்தனர்.

இதனால் அவர்களுக்கு நல்லது கெட்டது தெரிந்தது. பல்வேறு விஷயங்களை அவர்களுடன் இருந்து கற்றதால் அறிவு கூர்மை, புத்திசாலித்தனம் வளர்ந்தது. கூட்டுக் குடும்பத்தின் மூலம் பலதரப்பட்ட மக்களை எப்படி அட்ஜெஸ்ட் செய்துக் கொண்டு வாழ பழகுவது உள்ளிட்டவற்றையும் கற்றுக் கொண்டனர்.
கூட்டுக் குடும்பத்தில்தான் குழந்தைகள் சரளமாக பேசக் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. சிறிய குடும்பத்தில் தாயும், தந்தையும் அலுவலகத்திற்கு சென்றுவிடுகிறார்கள். குழந்தைகள் தனிமையில் வளருகிறார்கள். இதனால் பேசுவதற்கு தாமதமாகிறது.
மேலும் செல்போனையே தங்கள் உலகமாக நினைத்துக் கொண்டு அதிலேயே லயித்து போகிறார்கள். இரவு நேரத்தில் மின்மினி பூச்சு போல் விளக்குகளை அணைத்தாலும் செல்போன் வெளிச்சத்தில் குழந்தைகள் கேம்ஸ், யூடியூப் பார்த்து வருகிறார்கள்.
அது போல் அந்த காலத்தில் கூட்டுக் குடும்பத்தினருடன் குழந்தைகள் படுத்து தூங்கினர். அது போல் அவர்களுடனேயே காலையில் எழும் பழக்கத்தையும் கொண்டிருந்தனர். ஆனால் இன்று நிலைமை தலைகீழ்! இரவு தூங்குவதற்கு 1 மணி , 2 மணி ஆகிறது. காலை எழுவதற்கு 10, 11 மணி ஆகிறது.
இப்படிப்பட்ட சூழலில் குடும்பத்தினருடன் ஒன்றாக படுத்து உறங்கும் காலமும் செல்போன் இல்லாத உலகமும் இப்போது கிடைத்தால் எப்படி இருக்கும். கவிஞர் சினேகன் வீட்டில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்த வீடியோவை இன்பா என்ற சமூகவலைதளவாசி வெளியிட்டு, மாசத்துல ஒரு நாள் இல்ல, வருடத்திற்கு ஒரு நாள் இந்த மாதிரி வாழுங்க! இன்பமான வாழ்க்கை... இதுக்கு எல்லாம் சான்சே இல்லாம போச்சு! என குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சினேகன் வீட்டிற்கு அவருடைய சொந்தக்காரர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். கிட்டதட்ட 20 பேராவது இருப்பர். வீட்டு ஹாலில் பாய் போட்டு , தலையணை போடுகிறார்கள், சினேகன் மனைவி கனிகா, அனைவரது செல்போனையும் சேகரிக்கிறார். அதை வேறு ஒரு இடத்தில் வைத்துக் கொள்கிறார். அன்றைய தினம் செல்போனே இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் படுத்து உறங்குகிறார்கள். இப்படிப்பட்ட வாழ்க்கை அனைவருக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications