செங்கல்பட்டில் பிளாட்பாரத்துக்கும், ரயிலுக்கும் நடுவில் பிரமிளா.. நொடியில் எமன் வாசலை தொட்டு வந்த பெண்
சென்னை: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நடந்த ஒரு திடீர் விபத்து, அனைவரையும் பதறவைத்ததுடன், ஒரு ஆர்பிஎப் காவலரின் நொடிப்பொழுது துணிச்சலால் பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.. இந்த சம்பவம்தான் வீடியோவாகவும் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.. இதை பார்த்த பொதுமக்கள் ஆர்பிஎப் போலீசுக்கு பாராட்டுக்களை அள்ளி வீசி கொண்டு இருக்கிறார்கள்..
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் பிரமிளா.. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.. சொந்த காரியமாக சென்னை வந்த பிரமிளா, தன்னுடைய 2 குழந்தைகளுடன் விழுப்புரம் கிளம்பி செல்ல தயாரானார்..

சென்னை தாம்பரத்திலிருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் பயணியர் ரயிலில் ஏறுவதற்காக நேற்று செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் 6வது பிளாட்பாரத்துக்கு வந்தார்..
செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷன்
அப்போது நடைமேடையில் இருந்து ரயில், மெதுவாக நகரத்தொடங்கியது.. இதை பார்த்த பிரமிளா, குழந்தைகளுடன் அவசர அவசரமாக பெட்டியில் ஏற முயன்றார்.. அப்போது பிரமிளா எதிர்பாராத விதமாக நிலைதடுமாறியதுடன், ஓடும் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையிலான இடைவெளியில் தவறி விழுந்துவிட்டார்.
இதை பார்த்த அங்கிருந்த பயணிகள் அலறி கத்தினார்கள்.. ரயிலுக்கு அடியில் பிரமிளா
சென்றுவிட்டதால், என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.. ஆப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்பிஎப் காவலர் தயாநிதி என்பவர், இன்றி உடனடியாக விசிலை ஊதி, டிரைவருக்கு எச்சரிக்கை சைகை காட்டினார்.
ரயிலுக்கு அடியில் பிரமிளா
சைகையை கவனித்த ரயில் ஓட்டுநரும் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் சக்கரங்களுக்கு இடையில் சிக்க இருந்த பிரமிளா நூலிழையில் உயிர் தப்பினார்.
தொடர்ந்து, ரயிலுக்கு அடியில் சிக்கியிருந்த பிரமிளாவை காவலர் தயாநிதியும் அங்கிருந்த பயணிகளும் சேர்ந்து பாதுகாப்பாக மீட்டனர்.
அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்... உடனடியாக சிகிச்சை தரப்பட்டதையடுத்து, பிரமிளா அபாய கட்டத்தில் இருந்து மீண்டு விட்டதாக தெரிவித்தனர்.
சபாஷ் ஆர்பிஎப் போலீஸ்
ஆர்பிஎப் காவலரின் விழிப்புணர்வு அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. சரியான நேரத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஒரு உயிரை காப்பாற்றிய ஆர்பிஎப் காவலர் தயாநிதியின் துணிச்சலான செயலை, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் உன்னிகிருஷ்ணன் மற்றும் சக அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்...
இந்த பரபரப்பான சம்பவத்தின் வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. பொதுமக்கள் இந்த காவலருக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ரயில் முழுமையாக நிற்கும் வரை காத்திருந்து ஏற வேண்டும் என்று ரயில்வே நிர்வாகமும் அறிவுறுத்தியுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications