Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிகுமார் நடித்த அயோத்தி படம் கதை யாருடையது? எழுத்தாளர்கள் எஸ்ரா-மாதவராஜ் இடையே டிஸ்யூம் டிஸ்யூம்!

சசிகுமாரின் அயோத்தி கதை யாருடையது என்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நடித்த அயோத்தி படத்தை முன்வைத்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இப்படத்தின் கதை யாருடையாது என்பதில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா, எஸ்ரா) மற்றும் மாதவராஜ் இடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்துள்ளது.

சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டு வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சசிகுமார் வெற்றிப் படத்தை கொடுத்திருப்பதாக கொண்டாடப்பட்டு வருகிறார்.

A new Controversy erupts over Actor Sasikumar Ayothi Movie

இப்படம் தொடர்பாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது: சிறந்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இன்று சாலிகிராமத்திலுள்ள எனது அலுவலகம் வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவரது நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள அயோத்தி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் கதை என்னுடையது. திரைப்படத்திற்காகவே இதனை எழுதினேன். படம் மிகுந்த உணர்ச்சிப் பூர்வமான வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்கினை விட்டு வெளியே வரும் பலரும் கண்ணீர் மல்கப் பாராட்டுகிறார்கள். ஊடகங்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. திரையுலகினை சேர்ந்த பலரும் எனக்குத் தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

A new Controversy erupts over Actor Sasikumar Ayothi Movie

அயோத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு சசிகுமார் காட்டிய தீவிர அக்கறையும் ஈடுபாடுமே முக்கியக் காரணம். கதையை மட்டுமே முதன்மைப்படுத்தித் தனது கதாபாத்திரத்தைச் சரியாக உள்வாங்கி அவர் திறம்பட நடித்துள்ளார். அவரது ComeBack film என மக்கள் கொண்டாடுகிறார்கள். இயக்குநர் மந்திரமூர்த்தி உணர்வுப் பூர்வமாகப் படத்தை உருவாக்கியது பாராட்டுக்குரியது. தேர்ந்த நடிகர்கள். சிறந்த இசை, கச்சிதமான படத்தொகுப்பு எனப் படம் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. நல்லதொரு படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் டிரைடன்ட் ரவீந்திரனை மனம் நிறைந்து பாராட்டுகிறேன். இன்று அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளச் சசிகுமார் வந்திருந்தார். அவருடன் இணைந்து இன்னொரு திரைப்படம் எழுதுகிறேன். புதிய படத்திற்கான கதை குறித்துப் பேசினோம். இவ்வாறு எஸ்.ரா. பதிவிட்டிருந்தார்.

A new Controversy erupts over Actor Sasikumar Ayothi Movie

ஆனால் எழுத்தாளர் மாதவராஜ் தமது சமூக வலைதளப் பக்கத்தில் எழுதி இருப்பதாவது: அயோத்தி படத்தின் விமர்சனத்தை இன்று இந்து தமிழ் பத்திரிகையில் படித்தேன். அப்போதுதான் அந்தக் கதையை அறிய முடிந்தது.

A new Controversy erupts over Actor Sasikumar Ayothi Movie

தீராத பக்கங்கள் வலைப்பக்கத்தில் 2011 செப்டம்பர் 3 ம்தேதி நான் எழுதிய 'அழக்கூட திராணியற்றவர்கள்' என்னும் பதிவின் அப்பட்டமான காப்பியாகத் தெரிகிறது. அதன் லிங்க்கை முதல் கமெண்ட்டில் தருகிறேன். படம் பார்த்தவர்கள் சொல்லுங்கள். எங்கள் சங்கத் தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் பெற்ற நேரடி அனுபவத்தை நான் பதிவு செய்திருந்தேன். ராமேஸ்வரம் வந்த வட இந்தியக் குடும்பம் ஒன்று விபத்தில் சிக்கி தவித்துப் போய் நின்றபோது எங்கள் தோழர்கள் செய்த மனிதாபிமான உதவி அது. 2021ல் வெளி வந்த எனது 'இரண்டாம் இதயம்' புத்தகத்திலும் இந்த பதிவு இடம் பெற்றிருந்தது. இவ்வாறு மாதவராஜ் எழுதியுள்ளார். இருவரது கருத்துகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

A new Controversy erupts over Actor Sasikumar Ayothi Movie

முன்னதாக Mugil Siva தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாவது: ழுத்தாளர் மற்றும் நண்பர் நரனின் கதை திருடப்பட்டிருக்கிறது. அவரது சரீரம் சிறுகதைத் தொகுப்பின் வாரணாசி என்ற கதை, 'அயோத்தி' என்ற திரைப்படமாக்கப்பட்டிருக்கிறதாக அறிகிறேன். படத்தின் டிரைலர் இப்படி ஒரு வசனத்துடன் ஆரம்பமாகிறது. 'இந்த உலகத்துல இருக்குற ஜீவராசிகள்லயே ரொம்ப மோசமானவன் மனுசந்தான்.'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+