சசிகுமார் நடித்த அயோத்தி படம் கதை யாருடையது? எழுத்தாளர்கள் எஸ்ரா-மாதவராஜ் இடையே டிஸ்யூம் டிஸ்யூம்!
சசிகுமாரின் அயோத்தி கதை யாருடையது என்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
சென்னை: இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நடித்த அயோத்தி படத்தை முன்வைத்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இப்படத்தின் கதை யாருடையாது என்பதில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா, எஸ்ரா) மற்றும் மாதவராஜ் இடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்துள்ளது.
சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டு வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சசிகுமார் வெற்றிப் படத்தை கொடுத்திருப்பதாக கொண்டாடப்பட்டு வருகிறார்.

இப்படம் தொடர்பாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது: சிறந்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இன்று சாலிகிராமத்திலுள்ள எனது அலுவலகம் வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவரது நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள அயோத்தி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் கதை என்னுடையது. திரைப்படத்திற்காகவே இதனை எழுதினேன். படம் மிகுந்த உணர்ச்சிப் பூர்வமான வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்கினை விட்டு வெளியே வரும் பலரும் கண்ணீர் மல்கப் பாராட்டுகிறார்கள். ஊடகங்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. திரையுலகினை சேர்ந்த பலரும் எனக்குத் தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

அயோத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு சசிகுமார் காட்டிய தீவிர அக்கறையும் ஈடுபாடுமே முக்கியக் காரணம். கதையை மட்டுமே முதன்மைப்படுத்தித் தனது கதாபாத்திரத்தைச் சரியாக உள்வாங்கி அவர் திறம்பட நடித்துள்ளார். அவரது ComeBack film என மக்கள் கொண்டாடுகிறார்கள். இயக்குநர் மந்திரமூர்த்தி உணர்வுப் பூர்வமாகப் படத்தை உருவாக்கியது பாராட்டுக்குரியது. தேர்ந்த நடிகர்கள். சிறந்த இசை, கச்சிதமான படத்தொகுப்பு எனப் படம் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. நல்லதொரு படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் டிரைடன்ட் ரவீந்திரனை மனம் நிறைந்து பாராட்டுகிறேன். இன்று அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளச் சசிகுமார் வந்திருந்தார். அவருடன் இணைந்து இன்னொரு திரைப்படம் எழுதுகிறேன். புதிய படத்திற்கான கதை குறித்துப் பேசினோம். இவ்வாறு எஸ்.ரா. பதிவிட்டிருந்தார்.

ஆனால் எழுத்தாளர் மாதவராஜ் தமது சமூக வலைதளப் பக்கத்தில் எழுதி இருப்பதாவது: அயோத்தி படத்தின் விமர்சனத்தை இன்று இந்து தமிழ் பத்திரிகையில் படித்தேன். அப்போதுதான் அந்தக் கதையை அறிய முடிந்தது.

தீராத பக்கங்கள் வலைப்பக்கத்தில் 2011 செப்டம்பர் 3 ம்தேதி நான் எழுதிய 'அழக்கூட திராணியற்றவர்கள்' என்னும் பதிவின் அப்பட்டமான காப்பியாகத் தெரிகிறது. அதன் லிங்க்கை முதல் கமெண்ட்டில் தருகிறேன். படம் பார்த்தவர்கள் சொல்லுங்கள். எங்கள் சங்கத் தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் பெற்ற நேரடி அனுபவத்தை நான் பதிவு செய்திருந்தேன். ராமேஸ்வரம் வந்த வட இந்தியக் குடும்பம் ஒன்று விபத்தில் சிக்கி தவித்துப் போய் நின்றபோது எங்கள் தோழர்கள் செய்த மனிதாபிமான உதவி அது. 2021ல் வெளி வந்த எனது 'இரண்டாம் இதயம்' புத்தகத்திலும் இந்த பதிவு இடம் பெற்றிருந்தது. இவ்வாறு மாதவராஜ் எழுதியுள்ளார். இருவரது கருத்துகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக Mugil Siva தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாவது: ழுத்தாளர் மற்றும் நண்பர் நரனின் கதை திருடப்பட்டிருக்கிறது. அவரது சரீரம் சிறுகதைத் தொகுப்பின் வாரணாசி என்ற கதை, 'அயோத்தி' என்ற திரைப்படமாக்கப்பட்டிருக்கிறதாக அறிகிறேன். படத்தின் டிரைலர் இப்படி ஒரு வசனத்துடன் ஆரம்பமாகிறது. 'இந்த உலகத்துல இருக்குற ஜீவராசிகள்லயே ரொம்ப மோசமானவன் மனுசந்தான்.'
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications