Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜி மீது புதிய புகார்! நேர்முக தேர்வில் பென்சிலில் எழுதப்பட்ட மார்க்? சிக்கலில் அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்துத் துறையில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் மதிப்பெண்கள் பென்சிலில் குறிக்கப்பட்டிருந்ததாக அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த நேரத்தில் அமைச்சராக பொறுப்பேற்றாரோ அடுத்தடுத்து அவருக்கு சிக்கல்கள் துரத்திக் கொண்டே வந்தன. இந்த நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவர் சிறைக்கே சென்றுவிட்டார்.

A new problem for Senthil Balaji, ED found that marks in Transport department Interview

கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு அவருக்கு காவேரி மருத்துவமனையில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜிக்கு வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுவை நீதிபதி அல்லி எடுத்துக் கொள்ளவில்லை. அந்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

சுமார் 2 மாதங்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி எப்போது ஜாமீனில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் தனது தம்பிக்குத்தான் எல்லாமே தெரியும் என கூறிவிட்டார். செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு போக்குவரத்து துறை மோசடி புகாரில் விசாரணை நடத்த 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

கரூரில் ரூ. 30 கோடி மதிப்பிலான நிலத்தை வெறும் ரூ 10 லட்சத்துக்கு வாங்கி அதில் வீடு கட்டி வந்தார். அந்த வீட்டை அமலாக்கத் துறை முடக்கியது. செந்தில் பாலாஜியின் பெயரை பயன்படுத்தி அசோக்குமார் நிறைய மோசடிகளை செய்திருக்கலாம் என்றும் அவர் கைது செய்யப்பட்டால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக செந்தில் பாலாஜி பணம் பெற்று மோசடி செய்தது விசாரணை மூலம் தெளிவாக தெரிகிறது. பணி நியமனங்கள் குறித்து செந்தில் பாலாஜியின் உதவியாளர்களுக்கும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கும் இடையே நடந்த மின்னஞ்சல் தகவல் பரிமாற்றங்கள் கிடைத்திருக்கின்றன.

நேர்முகத் தேர்வின்போது மதிப்பெண்கள் பென்சிலில் குறிக்கப்பட்டதும் பிறகு பணம் கொடுத்தவர்களின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டு பணியாணை வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய புகாரால் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா இல்லாவிட்டால் அமலாக்கத் துறை கஸ்டடி கேட்குமா என தெரியவில்லை. ஆனால் நேற்று முன் தினம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான போது தனக்கு கால் மரத்து போவதாக செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார் என அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+