சென்னையில் கடும் வெயிலால் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Recommended Video
சென்னை: சென்னையில் கடும் வெயிலால் முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

போதாகுறைக்கு ஃபனி புயலும் வெப்பத்தின் அளவை உயர்த்திவிட்டு சென்றுள்ளது. இதனால் பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அனல்காற்று வீசி வருகிறது.
இதனால் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். இதன்காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையை அடுத்த திருவொற்றியூரில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் வெயிலின் கொடுமையால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தற்போது அக்னி நட்சத்திரம் துவங்கிவிட்ட நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த கடும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். வெயிலால் முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications