டிரைவிங் லைசென்ஸில் மீண்டும் மாற்றம்.. இவர்களுக்கு ஆர்சி புக்கும் ரத்து.. மத்திய அரசு அதிரடி
சென்னை: 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால், அவர்கள் ஓட்டிய வாகனத்தின் ஆர்சியை ரத்து செய்யும் புதிய விதிமுறை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. பிடிபடும் மைனருக்கு 25000 அபராதம் விதிப்பதுடன் 25 வயது வரை அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா முழுவதுமே வாகன போக்குவரத்து மிக அதிகமாகிவிட்டது. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆனால் 18 வயது நிறைவு பெறாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதும் அதிகரித்து வருகிறது.

சில பெற்றோர்கள் பெருமைக்காக ஓட்டுநர் உரிமம் பெற தகுதியில்லாத வயதில் உள்ள தங்கள் குழந்தைகளிடம் இரு சக்கர வாகனத்தைக் கொடுத்து ஓட்ட விடுகிறார்கள். இன்னும் சில வசதி படைத்த பெற்றோர் சொகுசு பைக் வாங்கித்தருவது, சொகுசு கார் ஓட்ட அனுமதிப்பது போன்ற செயல்களை செய்கிறார்கள்.
பெற்றோர்களின் அலட்சியம் மற்றும் பிள்ளைகளின் பிடிவாதம் காரணமாக மைனர்கள் வாகனம் ஓட்டுவது இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் கூட பள்ளிகளுக்கு பைக்குகளை எடுத்து வருவது சாதாரண நிகழ்வாக உள்ளது.
மாணவர்கள் ஒரே வாகனத்தில் இரண்டு அல்லது மூன்று பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக செல்கிறார்கள். போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமல் சிறுவர்கள் சகட்டுமேனிக்கு வாகனத்தை வேகமாக ஓட்டுகிறார்கள். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆர்வத்தில் பைக் சாகசம் செய்கிறார்கள். சிலர் ரேஸில் ஓட்டுகிறார்கள். சாதாரணமாக செல்ல வேண்டிய சாலையில் ரேஸில் செல்வது போல் செல்கிறார்கள்.இப்படி செல்லும் இளைஞர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதுடன், மற்றவர்களின் உயிரையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.
சில சிறார்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதையும் செய்கிறார்கள். இதன் காரணமாக இரு சக்கர வாகன விபத்துகள் அதிக அளவில் நடந்துவருகிறது. இதை தடுக்க விரும்பிய மத்திய அரசு போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்டத்தை கடுமையாக்கியது.
மத்திய அரசின் சட்டத்தை பின்பற்றி தமிழக போக்குவரத்துத்துறை 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199 (ஏ)ன்படி உரிய ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் பெறாமல் 18 வயதுக்கு கீழ் வாகனங்களை ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்தது. மேலும், சிறுவர்கள் 12 மாதங்ளுக்கு சாலையில் வாகனம் ஓட்டுவது ரத்து செய்யப்படுவதோடு, வாகனம் ஓட்டிய சிறுவர்களின் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற இயலாது என்று அறிவித்தது. இந்த சட்டம் இன்று வரை முறையாக அமல்படுத்தப்படாத நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு, இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளை வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த விதியின்படி, இனி யாரும் ஓட்டுநர் உரிமம் பெற, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நீண்ட நேரம் வரிசையில் நிற்க தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளிலேயே ஓட்டுநர் உரிமத்துக்கான சோதனைகளில் ஈடுபடலாம் என்றும் தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் சோதனைகளை நடத்துவதற்கும், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்குமான தரச்சான்றிதழ்களை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வழங்கி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆர்டிஓ ஆபிஸ்க்கு பதில் தனியார் நிறுவனங்களே வாகன ஓட்டுநர் உரிமத்தை தரப்போகின்றன.. பள்ளியில் படித்து மாணவர்கள் பாஸ் ஆவது போல் சிஸ்டம் மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல், வாகனம் ஓட்டினால் கடுமையான அபராதம் விதிக்கப்பட உள்ளது. ஜூன் 1 முதல் இந்த அபராதத் தொகை 1000 ரூபாயில் இருந்து, 2000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
25 வயது வரை லைசென்ஸ் கிடையாது: சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால் அவர்களின் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.. மேலும் சிறுவரின் பெற்றோருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சிறுவன் ஓட்டிய அந்த குறிப்பிட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழும் (ஆர்சி) ரத்து செய்யப்படும். மேலும் அந்தச் சிறுவர் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற அனுமதிக்கப்பட மாட்டார். இந்த விதிமுறை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது.
அதேநேரம் புதிய விதிமுறைகளின் படி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சான்றிதழ்களும் எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் நபரின் எந்த வகை ஓட்டுநர் உரிமத்தைப் பெற விரும்புகிறாரோ அதற்கான, சான்றிதழ்களை அமைச்சகம் முன்கூட்டியே அறிவித்துவிடும். அதேநேரம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை. விண்ணப்பதாரர்கள் அவர்களது விண்ணப்பத்தை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் https://parivahan.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேநேரம் தனியார் ஓட்டுநர் உரிமம் பயிற்சிப் பள்ளித் தொடங்க விரும்பும் நபர், குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனங்களுக்கான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி என்றால், கண்டிப்பாக 2 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் தகுந்த சோதனை வசதிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications