சென்னை அண்ணா நகரில் ரேஸ்.. மின்னல் வேகத்தில் வந்த கார்!.. சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து விபத்து
சென்னை: சென்னை அண்ணா நகரில் மின்னல் வேகத்தில் கார் ஒன்று சூப்பர் மார்க்கெட் உள்ளே புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார்.
சென்னை அண்ணா நகர் இரண்டாவது அவென்யூவில் நேற்று நள்ளிரவு மின்னல் வேகத்தில் 2 சொகுசு கார்கள் ரேஸில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் ஒரு கார் எதிர்பாராதவிதமாக மின்சார டிரான்ஸ்பார்மரில் மோதி அங்கிருந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்தது.
இதில் வெளியே இருந்த அந்த சூப்பர் மார்க்கெட்டின் காவலாளி ஒசிம் காயமடைந்தார். காரில் 2-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றொரு காரில் சட்டென்று தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
Recommended Video
சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான கார் என்றும் அந்த காரை அவரது மகன் ராஜேஷ் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து காரை ரேஸில் ஓட்டியதும் தெரியவந்தது. தப்பியோடியவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.