மீண்டும் அதே தொகுதி.. நீலகிரியில் போட்டியிட ஆ.ராசா முடிவு.. திமுக சார்பாக விருப்பமனு தாக்கல்!
லோக்சபா தேர்தலில் திமுக சார்பாக நீலகிரி தொகுதியில் போட்டியிட முடிவெடுத்து இருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக சார்பாக நீலகிரி தொகுதியில் போட்டியிட முடிவெடுத்து இருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா.
திமுக ஒரு பக்கம் சிறிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது இல்லாமல் இன்னொரு பக்கம் திமுக லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களின் விருப்ப மனுக்களையும் பெற்று வருகிறது.
ஆனால் திமுகவில் இதுவரை முக்கிய நபர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. முதல்முறையாக மத்திய அமைச்சர் ஆ.ராசா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

விருப்பமனு தாக்கல்
நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரியில் போட்டியிட மத்திய அமைச்சர் ஆ.ராசா முடிவு செய்துள்ளார். இன்று காலை திமுக அலுவலகம் வந்த அவர் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார். ஆ.ராசா ஆதரவாளர்களும் அவர் விருப்பமனு தாக்கல் செய்த போது உடன் இருந்தனர்.

நீலகிரி தொகுதி
நீலகிரி தொகுதி தனித் தொகுதியாகும். இது பட்டியலின வேட்பாளர்களுக்கான தொகுதி. அதனால் இந்த தொகுதி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. திமுக இங்கு போட்டியிடும் என்பது இதனால் உறுதியாகி உள்ளது.

மாற்றினார்
முதலில் பெரம்பலூர் தொகுதியில்தான் ஆ.ராசா போட்டியிட்டு வந்தார். 1996-2004 தேர்தல் வரை 4 முறை அங்கு போட்டியிட்டார். அதில் 3 முறை வெற்றிபெற்றார். அதன்பின் நீலகிரிக்கு மாறினார்.

மீண்டும் போட்டி
2009ல் நீலகிரியில் போட்டியிட்டு வென்றார். அதன்பின்தான் மத்திய தொலைத்தொடர்புதுறை அமைச்சர் ஆனார். 2014ல் இதே தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர்கள் எஸ். கோபால கிருஷ்ணனிடம் தோல்வி அடைந்தார். தற்போது மீண்டும் அதே தொகுதியில் இவர் போட்டியிட முடிவெடுத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications