சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் சேகர் வீட்டில்.. அரிய வகை மலைப்பாம்பு.. ஆடிப்போன வனத்துறை
சென்னை: சென்னை திருவெற்றியூர் விம்கோ நகர் பகுதிக்கு மிக அருகிலேயே பக்கிங்காம் கால்வாய் ஓடுகிறது. இங்கு அவ்வப்போது மலைப்பாம்புகள் நீச்சலடித்து கால்வாய்கள் மற்றும் சாக்கடை வடிகால்கள் வருவது வழக்கம். அப்படி வரும்போது நிலப்பகுதிகளில் தஞ்சம் புகுந்துவிடுகின்றன. மழைக்காலங்களில் தண்ணீர் மட்டம் உயரும்போது, இவை அடித்து வரப்படுவது உண்டு. அப்படித்தான் விம்கோ நகரில் மலைப்பாம்பு குட்டி ஒன்று அடித்து வரப்பட்டது. அதனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்
சென்னையை பொறுத்தவரை மலைப்பாம்புகளுக்குப் பிடித்தமான உணவுகள் தாராளமாகக் கிடைத்து வருகிறது. எலிகள் மற்றும் பெருச்சாளிகள் பாதாள சாக்கடை மறறும் குப்பைகள் தேங்கும் இடங்களில் அதிகம் இருக்கும். எனவே அவற்றை வேட்டையாடப் பாம்புகள் அவ்வப்போது வருகின்றன. அத்துடன் கோழிகள், ஆட்டுக்குட்டிகள் மற்றும் தெரு நாய்க்குட்டிகள் மலைப்பாம்புகளுக்கு எளிதான இரையாகின்றன.

விம்கோ நகர் பகுதியில் உள்ள பழைய தொழிற்சாலை வளாகங்கள், அடர்ந்த புதர்கள் மண்டிக்கிடக்கும் காலி மனைகள் போன்றவை மலைப்பாம்புகள் தங்குவதற்கு ஏற்ற இடங்களாக உள்ளன. எனவே அவ்வப்போது மலைப்பாம்புகள் வந்து செல்கினற்ன,
சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் சேகர் என்பவரது வீட்டுக்குள் குட்டி மலைப்பாம்பு ஒன்று வந்து விட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், மலைப்பாம்பை பிடிக்க முயற்சி செய்வதற்குள் அங்கிருந்த பாதாள சாக்கடை குழாய்க்குள் ஓடி மறைந்துவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்துவந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், சேகர் வீட்டை முழுமையாக ஆய்வு செய்தனர். அப்போது அந்த பாம்பு கழிவுநீர் செல்லும் பாதை வழியாக உள்ளே சென்று மறைந்து இருப்பதை கண்டுபிடித்தனர். சிறிது நேர முயற்சிக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள், லாவகமாகவும் பாதுகாப்பாகவும் அந்த குட்டி மலைப்பாம்பை பிடித்தனர்.
பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, "இது மலைப் பிரதேசங்களில் கற்களுக்கிடையே காணப்படும் அரிய வகை கருப்பு வால் மலைப்பாம்பு" என்றார்கள். பக்கிங்காம் கல்வாயில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications