உள்ளாட்சிக்கு மட்டும்தான் இப்போது தேர்தல்.. செம பிளான்.. அதிமுகவிற்கு அடிக்க போகும் லக்.. எப்படி?

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தலை தனியாக நடத்துவது ஆளும் அதிமுகவிற்கு அதிக பலன் அளிக்கும் என்று தேர்தல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

    சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தலை தனியாக நடத்துவது ஆளும் அதிமுகவிற்கு அதிக பலன் அளிக்கும் என்று தேர்தல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    தமிழகம் மீண்டும் தேர்தல் பரபரப்பிற்கு தயாராகி வருகிறது. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி இரண்டும் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

    தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும்.

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    ஆனால் தற்போது நகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதாவது நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. இதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நிர்வாக காரணங்களால் இப்படி செய்கிறோம்.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    தேர்தலை எளிதாக நடத்தும் வகையில் இப்படி செய்கிறோம் என்று தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவித்துள்ளது. இப்படி உள்ளாட்சி தேர்தலையும், மாநகராட்சி, நகராட்சி தேர்தலையும் தனியாக நடத்துவது அதிமுகவிற்கு பெரிய அளவில் உதவும். ஆளும் கட்சிக்கு இது அதிகமாக உதவும்.

    உள்ளாட்சி அமைப்பு

    உள்ளாட்சி அமைப்பு

    அதன்படி உள்ளாட்சி தேர்தலில் உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் அதிமுக கவனம் செலுத்த முடியும். தங்கள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோரையும் களமிறக்கி வேலை பார்க்க முடியும். ஆளும் கட்சி என்பதால் உள்ளாட்சி அமைப்புகளை தேர்தலில் பணிகளை எளிதாக செய்ய முடியும்.

    இரண்டு அமைப்புகள்

    இரண்டு அமைப்புகள்

    நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு இப்போது தேர்தல் இல்லை என்பதால் அதிமுக அதன் மீது கவனம் செலுத்த தேவையில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் வென்றுவிட்டு, அதன்பின் நகராட்சி அமைப்புகள் , மாநகராட்சி அமைப்புகள் மீது கவனம் செலுத்தலாம் என்று அதிமுக திட்டமிட்டு இருக்கிறது.

    இதற்கு முன் எப்படி

    இதற்கு முன் எப்படி

    இதற்கு முன்னதாக லோக்சபா தேர்தலின் போதே 21 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடந்தது. அப்போது அதிமுக லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தாமல் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தியது.இதனால் அதில் 9 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்தது.

    ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது

    ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது

    இதனால் அக்கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. அதேபோல் இந்த முறையும் படிப்படியாக தேர்தலில் கவனம் செலுத்தி, முதலில் உள்ளாட்சியை வெல்ல அதிமுக திட்டமிட்டுள்ளது. ஆகவே தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு அதிகமுகவிற்கு பெரிய பலன் அளிக்க போகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+