விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு.. சென்னையில் அவசர அவசரமாக தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்!
வாரணாசியில் இருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமான சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
சென்னை: வாரணாசியில் இருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமான சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
சென்னையில் நோக்கி இன்று மாலை புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் பி737-800 மாலை 8 மணி அளவில் சென்னை வந்தடைந்தது. சென்னையில் தரையிறங்கும் முன் விமானத்தின் இறக்கைகளில் உள்ள பிளாப்கள் எனப்படும் கருவிகள் செயல்படவில்லை.

பிளாப்கள்தான் விமானம் தரையிறங்கவும், புறப்படவும் உதவும். ஒரு இறக்கையில் உள்ள பிளாப்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறங்க அவசர முயற்சிகள் எடுக்கப்பட்டது.
இதையடுத்து ஒரு இறக்கையில் பக்க பிளாப்கள் உதவியுடன் விமானத்தை விமானி சாமர்த்தியமாக தரையிறக்கினார். சரியாக 8.10 மணிக்கு வாரணாசியில் இருந்த வந்த அந்த விமானம் சென்னையில் வெற்றிகரமாக தரையிங்கியது.
இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. இந்த விமானத்தில் 142 பயணிகள் இருந்தனர். 142 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கியதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications