இளம்பிராயம் முதல்.. அடேங்கப்பா எத்தனை பெரிய தியாக வாழ்வு வாழ்ந்திருக்கிறார் சங்கரய்யா தெரியுமா?
சென்னை: தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு பின்னர் இடதுசாரி இயக்கத்தின் பக்கம் திரும்பி தலைமறைவு வாழ்வு, சிறைவாழ்வு, தேர்தல் அரசியல் என பெருவாழ்வு வாழ்ந்தவர் மறைந்த போராளி தியாகி சங்கரய்யா.
சங்கரய்யாவும் வாழ்வும் வரலாறும்:

1922: தூத்துக்குடி ஆத்தூர் நரசிம்முலு- ராமானுஜம் மகனாக ஜூலை15-ல் பிறந்தார். 8 சகோதர, சகோதரிகள். சங்கரய்யாவின் இயற்பெயர் பிரதாபசந்திரன்.
1930-38: மதுரை புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளி, ஐக்கிய கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியேட் கல்வி பெற்றார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், முதலாவது இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்றார்.
1938: மாணவர் இயக்க மதுரை மாநாட்டில் மாவட்டச் செயலாளர், 1942-ல் மாநிலச் செயலாளரானார்.
1939: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மதுரை வந்தபோது மாணவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து பேச வைத்தார் சங்கரய்யா
1940: ஜானகி அம்மாள் உள்ளிட்டோரை கொண்ட கிளையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார் சங்கரய்யா.
1941 பிப்.28: சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் கைதுக்கு எதிரான மதுரை பொதுக் கூட்டத்தில் பேசியதால் சங்கரய்யா கைது செய்யப்பட்டார்.
1942 : ஜூனில் சங்கரய்யா சிறையில் இருந்து விடுதலையானார்.
1944: கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர்; நெல்லை மாணவர் கிளர்ச்சிக்காக மீண்டும் கைது- விடுதலை
1947 ஆக.14: மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த சங்கரய்யா நாடு விடுதலை பெறுவதற்கு முதல் நாள் விடுதலை செய்யப்பட்டார்.
1950களில் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டது. அப்போது 2 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த சங்கரய்யா பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தார்.
1957, 62 : சட்டசபை தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் சங்கரய்யா; இந்தியா- சீனா யுத்த காலத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார்
1964 : கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்த போது சிபிஎம் கட்சியை உருவாக்கிய நிறுவனத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்
1965 : இடதுசாரி தலைவர்களுடன் சங்கரய்யா கைது செய்யப்பட்டு 16 மாத சிறைவாசத்துக்கு பின் விடுதலையானார்
1967 : சட்டசபை தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் சங்கரய்யா
1969 : விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரானார்
1977, 1980: சட்டசபை தேர்தல்களில் வென்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டசபை குழு தலைவராக பணியாற்றினார்
1995: சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில குழு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-ம் ஆண்டு வரை சங்கரய்யா இப்பொறுப்பில் இருந்தார்.
2023: தமது 102 வயதில் முதுபெரும் போராளி சங்கரய்யா விடைபெற்றார்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications