இளம்பிராயம் முதல்.. அடேங்கப்பா எத்தனை பெரிய தியாக வாழ்வு வாழ்ந்திருக்கிறார் சங்கரய்யா தெரியுமா?
சென்னை: தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு பின்னர் இடதுசாரி இயக்கத்தின் பக்கம் திரும்பி தலைமறைவு வாழ்வு, சிறைவாழ்வு, தேர்தல் அரசியல் என பெருவாழ்வு வாழ்ந்தவர் மறைந்த போராளி தியாகி சங்கரய்யா.
சங்கரய்யாவும் வாழ்வும் வரலாறும்:

1922: தூத்துக்குடி ஆத்தூர் நரசிம்முலு- ராமானுஜம் மகனாக ஜூலை15-ல் பிறந்தார். 8 சகோதர, சகோதரிகள். சங்கரய்யாவின் இயற்பெயர் பிரதாபசந்திரன்.
1930-38: மதுரை புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளி, ஐக்கிய கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியேட் கல்வி பெற்றார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், முதலாவது இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்றார்.
1938: மாணவர் இயக்க மதுரை மாநாட்டில் மாவட்டச் செயலாளர், 1942-ல் மாநிலச் செயலாளரானார்.
1939: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மதுரை வந்தபோது மாணவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து பேச வைத்தார் சங்கரய்யா
1940: ஜானகி அம்மாள் உள்ளிட்டோரை கொண்ட கிளையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார் சங்கரய்யா.
1941 பிப்.28: சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் கைதுக்கு எதிரான மதுரை பொதுக் கூட்டத்தில் பேசியதால் சங்கரய்யா கைது செய்யப்பட்டார்.
1942 : ஜூனில் சங்கரய்யா சிறையில் இருந்து விடுதலையானார்.
1944: கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர்; நெல்லை மாணவர் கிளர்ச்சிக்காக மீண்டும் கைது- விடுதலை
1947 ஆக.14: மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த சங்கரய்யா நாடு விடுதலை பெறுவதற்கு முதல் நாள் விடுதலை செய்யப்பட்டார்.
1950களில் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டது. அப்போது 2 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த சங்கரய்யா பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தார்.
1957, 62 : சட்டசபை தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் சங்கரய்யா; இந்தியா- சீனா யுத்த காலத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார்
1964 : கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்த போது சிபிஎம் கட்சியை உருவாக்கிய நிறுவனத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்
1965 : இடதுசாரி தலைவர்களுடன் சங்கரய்யா கைது செய்யப்பட்டு 16 மாத சிறைவாசத்துக்கு பின் விடுதலையானார்
1967 : சட்டசபை தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் சங்கரய்யா
1969 : விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரானார்
1977, 1980: சட்டசபை தேர்தல்களில் வென்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டசபை குழு தலைவராக பணியாற்றினார்
1995: சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில குழு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-ம் ஆண்டு வரை சங்கரய்யா இப்பொறுப்பில் இருந்தார்.
2023: தமது 102 வயதில் முதுபெரும் போராளி சங்கரய்யா விடைபெற்றார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications