Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளம்பிராயம் முதல்.. அடேங்கப்பா எத்தனை பெரிய தியாக வாழ்வு வாழ்ந்திருக்கிறார் சங்கரய்யா தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு பின்னர் இடதுசாரி இயக்கத்தின் பக்கம் திரும்பி தலைமறைவு வாழ்வு, சிறைவாழ்வு, தேர்தல் அரசியல் என பெருவாழ்வு வாழ்ந்தவர் மறைந்த போராளி தியாகி சங்கரய்யா.

சங்கரய்யாவும் வாழ்வும் வரலாறும்:

A timeline Veteran Communist leader Sankaraiah Life History

1922: தூத்துக்குடி ஆத்தூர் நரசிம்முலு- ராமானுஜம் மகனாக ஜூலை15-ல் பிறந்தார். 8 சகோதர, சகோதரிகள். சங்கரய்யாவின் இயற்பெயர் பிரதாபசந்திரன்.

1930-38: மதுரை புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளி, ஐக்கிய கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியேட் கல்வி பெற்றார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், முதலாவது இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்றார்.

1938: மாணவர் இயக்க மதுரை மாநாட்டில் மாவட்டச் செயலாளர், 1942-ல் மாநிலச் செயலாளரானார்.

1939: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மதுரை வந்தபோது மாணவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து பேச வைத்தார் சங்கரய்யா

1940: ஜானகி அம்மாள் உள்ளிட்டோரை கொண்ட கிளையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார் சங்கரய்யா.

1941 பிப்.28: சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் கைதுக்கு எதிரான மதுரை பொதுக் கூட்டத்தில் பேசியதால் சங்கரய்யா கைது செய்யப்பட்டார்.

1942 : ஜூனில் சங்கரய்யா சிறையில் இருந்து விடுதலையானார்.

1944: கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர்; நெல்லை மாணவர் கிளர்ச்சிக்காக மீண்டும் கைது- விடுதலை

1947 ஆக.14: மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த சங்கரய்யா நாடு விடுதலை பெறுவதற்கு முதல் நாள் விடுதலை செய்யப்பட்டார்.

1950களில் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டது. அப்போது 2 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த சங்கரய்யா பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தார்.

1957, 62 : சட்டசபை தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் சங்கரய்யா; இந்தியா- சீனா யுத்த காலத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார்

1964 : கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்த போது சிபிஎம் கட்சியை உருவாக்கிய நிறுவனத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்

1965 : இடதுசாரி தலைவர்களுடன் சங்கரய்யா கைது செய்யப்பட்டு 16 மாத சிறைவாசத்துக்கு பின் விடுதலையானார்

1967 : சட்டசபை தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் சங்கரய்யா

1969 : விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரானார்

1977, 1980: சட்டசபை தேர்தல்களில் வென்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டசபை குழு தலைவராக பணியாற்றினார்

1995: சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில குழு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-ம் ஆண்டு வரை சங்கரய்யா இப்பொறுப்பில் இருந்தார்.

2023: தமது 102 வயதில் முதுபெரும் போராளி சங்கரய்யா விடைபெற்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+