கிண்டியில் நடுரோட்டில் கொடூரம்.. பெண்ணை கொன்ற இளைஞர்.. கொலைகாரன் மாயம்.. இதுதான் பின்னணி!
கிண்டியில் இளைஞர் ஒருவர் தனது மாமியாரை திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: சென்னை கிண்டியில் இளைஞர் ஒருவர் தனது மாமியாரை திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிண்டியில் நேற்று நடுரோட்டில் கொடூர கொலை ஒன்று நடந்து இருக்கிறது. இது தொடர்பாக போலீஸ் விசாரணையில் பல பரபரப்பு விஷயங்கள் வெளியாகி உள்ளது.
கிண்டியில் இருக்கும் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்தான் ரேவதி. இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ரேவதியின் கணவர் 4 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.

என்ன பிரச்சனை
இந்த நிலையில் ரேவதியின் மகள் ஜீவிதாவிற்கு கடந்த வருடம் அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. சென்ற வருட இறுதியில் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து இருக்கிறது. ஆனால் திருமணம் திடீர் என்று நிறுத்தப்பட்டது.

போலீசில் புகார்
ஆனால் வினோத், தனக்கு ஜீவிதாவைதான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து பிரச்சனை ஏற்படவே ரேவதி வினோத் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து வினோத்தும், ஜீவிதாவும் நட்பில் இருந்துள்ளனர். இதனால் வினோத் மீண்டும் பெண் கேட்டு ரேவதி வீட்டிற்கு சென்றுள்ளார்.

கொலை செய்தார்
ஆனால் ரேவதி தொடர்ந்து இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து நேற்று இரவு ரேவதி பணியை முடித்துவிட்டு கிண்டி அருகே வரும் போது, வினோத் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். நண்பர்களுடன் வந்த வினோத் ரேவதியுடன் சண்டையிட்டு உள்ளார். பின் அதே இடத்தில் ரேவதியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடி இருக்கிறார்.

யார் செய்தது
இதில் ரேவதி சம்பவ இடத்திலேயே பலியானார். முதலில் இந்த கொலையை யார் செய்தது என்ற விவரம் தெரியவில்லை. அதன்பின் போலீசார் ஜீவிதாவிடம் நடத்திய விசாரணையில் வினோத்தான் கொலையை செய்தது என்பது தெரியவந்துள்ளது. தற்போது தப்பி ஓடிய வினோத் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications