39 வயதில் ரிடையர்மென்ட்.. பென்சன் மட்டும் ரூ. 1.60 கோடி.. சேமிப்பு எவ்ளோனு கேட்டா தலையே சுத்துதே
சென்னை: மல்டி நேஷனல் கம்பெனிகளில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் 1.60 கோடி ரூபாய் பென்சனுடன் 39 வயதிலேயே தன்னுடைய ரிடையர்மென்டை அறிவித்துள்ளார். இவர் ஓய்வை அறிவித்த பின்னும் ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலர் வரை வருவாயைப் பெறப் போகிறாராம்.
அமேசான் நிறுவனத்தில் ஜமால் ராபின்சன் என்பவர் தன்னுடைய 16 வயதிலேயே ஜெனிட்டர் பொறுப்பில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தனக்கு 45 வயதாகும் போது ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்பது தான் இவருடைய இலக்கு. இந்த இலக்கை தன்னுடைய 17 வயதிலேயே நிர்ணயித்துவிட்டார் ஜமால்.

அமேசான், மைக்ரோசாஃப்ட், ஐபிஎம், இண்டெல் போன்ற பெரு நிறுவனங்களில் கம்ப்யூட்டர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்துள்ளார். இப்போது ஜமாலுக்கு 39 வயது. இந்நிலையில், தன்னுடைய இலக்கை 6 வருடத்துக்கு முன்பே எட்டிவிட்டதால் தற்போது தனது ஓய்வை அறிவித்து ஜமால் ஷாக் கொடுத்துள்ளார்.
ஆண்டு வருமானமாக 9.63 கோடி ரூபாய் சம்பாதித்து வரும் நிலையில் அதை கொஞ்சம் கூட யோசிக்காமல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணி இந்த முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து ஜமால் கூறுகையில், எனக்கு பணத்தின் மதிப்பு நன்றாகவே தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எனது நண்பர்கள் சிலர் 200 டாலர் மதிப்புள்ள ஷூக்களை வாங்கி அணிவார்கள். அப்போதெல்லாம் இதுபோன்ற விலை உயர்ந்த ஷூக்களை வாங்கி அணிய எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டுமோ என்று நான் நினைத்து ஆதங்கப்பட்டிருக்கிறேன். அதையெல்லாம் மனதில் வைத்து தான் ஒவ்வொரு முறை சம்பள உயர்வு பெறும்போதும் எனது சேமிப்பை சம்பள உயர்விற்கேற்ப அதிகரித்துக் கொண்டே இருந்தேன்.
எனக்கு சம்பள உயர்வு வரும்போதெல்லாம் அதில் இருந்து 30 சதவீதம் முதல் 50 சதவீதம் தொகையை சேமிப்புக்கு என ஒதுக்கிவிடுவேன். அதன் பின்னர், அந்த தொகையை 80 சதவீதமாக உயர்த்தினேன். பின்னர், எனது சம்பளத்தின் 90 சதவீத தொகையை சேமிப்புக்கென்று மட்டுமே ஒதுக்கியதால் எனது இலக்குக்கு முன்னதாக நான் ஓய்வு பெற முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் ரிடையர்டான ஜமால் ராபின்சஸ், தன்னுடைய வங்கிக் கணக்கில் சேமிப்பாக மட்டுமே ரூ. 30.65 கோடிக்கும் மேல் வைத்துள்ளாராம். துபாயில் வசித்து வரும் இவருக்கு ஓய்வுத் தொகை மட்டும் ஆண்டுதோறும் ரூ. 1.62 கோடி கிடைத்து வருகிறது. சேமிப்பு, முதலீட்டை சரியாக திட்டமிட்டுள்ளதால், ஓய்வு பெற்ற பின்னரும் ஒரு மில்லியன் டாலர் வரை என்னால் வருவாய் ஈட்ட முடியும் என்று கூறி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications