இடுப்பில் மறைத்து வைத்திருந்த ரூ.28 லட்சம்..கெத்தாக நடந்து வந்த வாலிபர்.. கொத்தாக தூக்கிய போலீசார்!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இடுப்பில் துணியால் மறைத்து ரூ.28 லட்சம் கொண்டு வந்த வாலிபர் போலீசாரிடம் சிக்கினார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி வரை தளர்வில்லாத முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வருகின்றனர்.

போலீசார் கண்காணிப்பு
ரயில்களில் மதுபாட்டிகள் கடத்தி வருவதை கண்டுபிடிப்பதற்காக சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்புப்படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.

சோதனை நடத்தினர்
இந்த ரயிலில் வந்த வாலிபர் ஒருவரிடம் போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினார்கள். அந்த நபரின் பேச்சு முன்னுக்குபின் முரணாக இருந்தது. மேலும் அவரது உடல் மொழியும் சந்தேகம் அளிக்கக் கூடிய வகையில் இருந்தது. இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வாலிபரிடம் முழுவதுமாக சோதனை நடத்தினார்கள்.

இடுப்பில் மறைத்து வைத்தார்
அந்த வாலிபரின் சட்டையை கழற்றி பார்த்தபோது அவர் இடுப்பில் கட்டுக்கட்டாக பணத்தை துணியால் சுற்றி வைத்திருப்பது தெரியவந்தது. அதில் ஒரு கட்டில் 200 எண்ணிக்கையில் 2,000 ரூபாய் என 7 கட்டுகள் இருந்தது. மொத்தம் அவர் ரூ.28 லட்சத்தை இடுப்பில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அவர் ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த கோணகந்தியா சந்திரசேகர் ( 21) என்பதும் குண்டூரில் ஒரு நகைக்கடையில் வேலை செய்வதும் தெரியவந்தது.

போலீசார் விசராணை
சென்னையில் உள்ள ஒருவரிடம் அந்த பணத்தை கொடுக்க வந்ததாக அந்த வாலிபர் தெரிவித்தார். ஆனால் பணத்துக்குரிய உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனை தொடர்ந்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். சந்திரசேகர் உண்மையிலேயே இந்த பணத்தை யாருக்கு கொடுக்க வந்தார்? இவருக்கு இவ்வளவு பணம் கிடைத்தது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications