வரும் சனிக்கிழமை ஆடி பெருக்கு நாள்.. அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் செயல்படும்.. ஐஜி அறிவிப்பு
சென்னை: ஆடி பெருக்கு தினமான வரும் சனிக்கிழமை தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்களும் செயல்படும் என பதிவுத்துறை ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலங்கள் உள்ளன. இங்கு வீடு, விளைநிலம் , கட்டடங்கள் உள்பட சொத்துக்கள் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இங்கு பத்திர பதிவு என்பது பொதுவாக விஷேச நாள்களில் அதிகமாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவதை நல்ல நாளில் இருக்க வேண்டும் என்ற மக்களின் நம்பிக்கை காரணமாக பொதுவாக விஷேச நாள்களில் அதிகம் வருவார்கள்.

விஷேச நாள்களில் பொதுவாக தமிழகத்தில் 18 ஆயிரம் பத்திரங்கள் வரை பதிவாகும். மற்ற நாள்களில் 5ஆயிரம் முதல் 7 ஆயிரம் பத்திரங்கள் மட்டுமே பதிவாகும்.
ஆனால் இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் மக்கள் பத்திர பதிவு செய்வதற்கு அதிக ஆர்வம்காட்டவில்லை. இதனால் பத்திர பதிவு என்பது சார் பதிவாளர் அலுவலகங்களில் மிகமிக குறைவாகவே இருக்கிறது.
இந்நிலையில வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) ஆடி பெருக்கு நாளாகும். எனவே நிலங்கள், வீடுகள், இடங்கள் என சொத்து வாங்குவோர் ஆடிபெருக்கு நாளில் பத்திரம் பதிவு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். எனவே அன்றைக்கு விடுமுறை(சனிக்கிழமை) என்ற போதிலும் மக்கள் நலன் கருதி தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்களும் காலை 10 மணி முதல் வழக்கம் போல் செயல்படும் என பதிவுத்துறை ஐஜி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனைத்து மண்டல டிஐஜிகளுக்கும் சுற்றிறிக்கை அனுப்பி உள்ளார். ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை விடுமுறை நாள் என்ற போதிலும் அனைத்து ஆவணப்பதிவுகள் மேற்கொள்ளும் வகையில் அன்றைக்க காலை 10 மணி முதல் சார் பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications