Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆருத்ரா கோல்டு மோசடி... நடிகர் ரூசோவிடம் ஆர்.கே. சுரேஷ் வாங்கிய ரூ.15 கோடி.. வெளியான வில்லத்தனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ரூசோவிடம் நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கிய தகவல் வெளியாகியுள்ளது. ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2438 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 21 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

Aarudhra Gold Scam Actor Russo to R.K. Suresh bought Rs. 15 crores

விசாரணையில், அந்த நிறுவனம் ஒரு லட்சத்து 9,255 பேரிடம், மொத்தம் ரூ.2,438 கோடி முதலீடு பெற்றுமோசடி செய்தது தெரியவந்தது. இந்தவழக்கு தொடர்பாக இதுவரை11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் நிறுவனர் ராஜசேகர், உஷா, மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டதால், ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ. 6.35 கோடி ரொக்கம், ரூ. 1.13 கோடி மதிப்புள்ள நகைகள், 22 கார்கள், 103 அசையா சொத்துகள், ரூ. 96 கோடி வங்கி பணம் முடக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டுக்கு தப்பி ஒடிய ராஜசேகர், அவரது மனைவி உஷா இருவரையும் பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய நாராயணி, தீபக் கோவிந்த பிரசாத், ரூமேஸ்குமார் ஆகிய மூவருக்கும் லுக் அவுட் சர்குலர் அளித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தகவலை பெற்றது. அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் வழக்கறிஞர், மனு குறித்து பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Aarudhra Gold Scam Actor Russo to R.K. Suresh bought Rs. 15 crores

இந்த நிலையில் நடிகர் ஆர். கே. சுரேஷ் உட்பட நான்கு பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.

இந்நிலையில் ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ரூசோவிடம் நடிகர் ஆர்.கே. சுரேஷ் ரூபாய் 15 கோடி வாங்கியது அம்பலமாகியுள்ளது. ஆர்.கே.சுரேஷ் கடந்த 5 மாதங்களாகவே தலைமறைவாக இருக்கிறார். இதனிடையே 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவெடுத்துள்ள நிலையில், 500 முகவர்கள் மூலம் ரூபாய் 800 கோடி வசூலித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மோசடி வழக்கில் 40 பேர் குற்றவாளிகளாக சேர்த்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்தார். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஹிஜாவு நிதி மோசடி வழக்கிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் ஆசியம்மாள் ஐஜி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+