பாஜக பக்கம் திரும்பிய ஆருத்ரா முதலீட்டாளர்கள் கோபம்! சென்னை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆவேசம்!
சென்னை: ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆருத்ரா கோல்டு நிறுவனமானது பொதுமக்களிடம் ரூ2,000 கோடி வசூல் செய்து ஏமாற்றி இருக்கிறது என்பது வழக்கு. ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் 20% முதல் 30% கூடுதல் வட்டி கிடைக்கும் என மோசடியாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனை நம்பி லட்சக்கணக்கானோர் ரூ2,000 கோடி அளவுக்கு முதலீடு செய்தனர். ஆனால் வாக்குறுதி அளித்த படி ஆருத்ரா நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை தரவில்லை.

இது தொடர்பாக ஆருத்ரா நிறுவனம் மீது சென்னை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதனிடையே இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்த பாஜக நிர்வாகி ஹரீஷ் அதிரடியாக கைது செய்யபப்ட்டார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது. பாஜகவில் பதவி பெறுவதற்காக பல நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஹரீஷ் அதிரடி வாக்குமூலம் கொடுத்தார்.
ஹரீஷ் கொடுத்த இந்த வாக்குமூலம் பாஜகவில் மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டிருகிறது. ஆருத்ரா நிறுவன ஹரீஷிடம் லஞ்சம் பெற்ற பாஜக நிர்வாகிகள் ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள், ஹரீஷிடம் பதவி தருவதற்காக லஞ்சம் வாங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஆருத்ரா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து கொண்டிருப்பதால் பாஜக மாநில நிர்வாகிகள் அந்த கட்சியைவிட்டே வெளியேறி வருகின்றனர். ஆருத்ரா விவகாரத்தை முன்வைத்து தாங்கள் விலகுவதாகவும் அறிக்கைகளில் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
இதனிடையே ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் கோபம், பாஜக மீது திரும்பி உள்ளது. சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை இன்று ஆருத்ரா முதலீட்டாளர்கள் முற்றுகையிட முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications