ஆருத்ரா மோசடி: போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்த ஆர்.கே.சுரேஷ்! கிடைத்த புதிய தகவல்கள்!
சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் இன்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முன்பு ஆஜராகவுள்ள நடிகர் ஆர்.கே. சுரேஷ் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிக்கி கைதான நடிகரும் தயாரிப்பாளருமான ரூசோ என்பவர் நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா மோசடி மூலம் ரூ 15 கோடி பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதையடுத்துதான் போலீஸார் ஆர்.கே. சுரேஷையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் அவருக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆர் .கே. சுரேஷ் ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி அவர் நேற்று முன் தினம் துபாயிலிருந்து சென்னை வந்தார்.
அவர் வந்ததும் அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸை வைத்து விசாரித்தனர். அப்போது தான் விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் அவர் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முன்பு நேற்று ஆஜரானார்.
மொட்டை அடித்துக் கொண்டு வித்தியாசமான கெட்டப்பில் வந்திருந்தார். இந்த நிலையில் அவரிடம் நேற்று நீண்ட நேரம் விசாரணை நடந்தது. அப்போது அவர் போலீஸாரிடம் கூறிய தகவல்கள் குறித்து வெளியாகியுள்ளது. ஆர் கே சுரேஷிடம் ஏன் இத்தனை நாள் தலைமறைவாக இருந்தீர்கள் என அதிகாரி கேட்டாராம்.
அதற்கு ஆர் கே சுரேஷ் கூறியிருந்ததாவது: நான் தலைமறைவாக இல்லை. என் தனிப்பட்ட காரணங்களுக்காகவே நான் துபாயில் இருந்தேன். தயாரிப்பாளர் ரூசோவிடம் ஒயிட் ரோஸ் என்ற படத்திற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றேன். அதை வங்கிக் கணக்கு மூலமாகவும் ரொக்கமாகவும் பெற்றுள்ளேன்.
ரூசோவிடம் வாங்கிய பணத்தை படத்திற்காகவும் சொந்த செலவிற்காகவும் பயன்படுத்தினேன் என தெரிவித்திருந்தார். ஆர்.கே. சுரேஷிடம் நடத்தும் விசாரணையை டிசம்பர் 18-ஆம் தேதி நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் ரூசோவுடனான பட ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை இன்று கொண்டு வருமாறு சுரேஷுக்கு போலீஸார் உத்தரவிட்டனர்.
ஆருத்ரா வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஆர்.கே. சுரேஷ் சந்தித்தாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications