Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆருத்ரா மோசடி: போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்த ஆர்.கே.சுரேஷ்! கிடைத்த புதிய தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் இன்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முன்பு ஆஜராகவுள்ள நடிகர் ஆர்.கே. சுரேஷ் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிக்கி கைதான நடிகரும் தயாரிப்பாளருமான ரூசோ என்பவர் நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா மோசடி மூலம் ரூ 15 கோடி பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

Aarudhra Scam:Important documents are being taken by R K Suresh

இதையடுத்துதான் போலீஸார் ஆர்.கே. சுரேஷையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் அவருக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆர் .கே. சுரேஷ் ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி அவர் நேற்று முன் தினம் துபாயிலிருந்து சென்னை வந்தார்.

அவர் வந்ததும் அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸை வைத்து விசாரித்தனர். அப்போது தான் விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் அவர் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முன்பு நேற்று ஆஜரானார்.

மொட்டை அடித்துக் கொண்டு வித்தியாசமான கெட்டப்பில் வந்திருந்தார். இந்த நிலையில் அவரிடம் நேற்று நீண்ட நேரம் விசாரணை நடந்தது. அப்போது அவர் போலீஸாரிடம் கூறிய தகவல்கள் குறித்து வெளியாகியுள்ளது. ஆர் கே சுரேஷிடம் ஏன் இத்தனை நாள் தலைமறைவாக இருந்தீர்கள் என அதிகாரி கேட்டாராம்.

அதற்கு ஆர் கே சுரேஷ் கூறியிருந்ததாவது: நான் தலைமறைவாக இல்லை. என் தனிப்பட்ட காரணங்களுக்காகவே நான் துபாயில் இருந்தேன். தயாரிப்பாளர் ரூசோவிடம் ஒயிட் ரோஸ் என்ற படத்திற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றேன். அதை வங்கிக் கணக்கு மூலமாகவும் ரொக்கமாகவும் பெற்றுள்ளேன்.

ரூசோவிடம் வாங்கிய பணத்தை படத்திற்காகவும் சொந்த செலவிற்காகவும் பயன்படுத்தினேன் என தெரிவித்திருந்தார். ஆர்.கே. சுரேஷிடம் நடத்தும் விசாரணையை டிசம்பர் 18-ஆம் தேதி நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் ரூசோவுடனான பட ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை இன்று கொண்டு வருமாறு சுரேஷுக்கு போலீஸார் உத்தரவிட்டனர்.

ஆருத்ரா வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஆர்.கே. சுரேஷ் சந்தித்தாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+