ஆருத்ரா நிதி நிறுவன மோசடி.. 2 மாதமாக ஆர்.கே.சுரேஷின் செல்போன் சுவிட்ச் ஆப்!.. எங்கே இருக்கிறார்?
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் எந்த நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்பது குறித்து விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஆருத்ரா நிதி நிறுவனம் கிளைகளை கொண்டது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ளது. இந்த நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம்தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரப்படுத்தியது.
இந்த விளம்பரத்தை பார்த்த பலர் இந்த நிறுவனத்தில் தங்களால் இயன்ற பணத்தை முதலீடு செய்தனர். இதன் மூலம் ரூ 2,438 கோடி பணம் வசூலிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

வசூலித்த பணம்
இந்த நிலையில் பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம் திருப்பித் தராமல் இழுத்தடித்ததாக புகார் எழுந்தது. பலர் ஆருத்ரா நிதி நிறுவன கட்டடங்களுக்கு சென்று போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தாமாக முன் வந்து நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீது ஆருத்ரா பெயரில் இயங்கி வந்த 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தது.

8 பேர் கைது
இந்த வழக்கு விசாரணையில் 8 பேர் கைது செய்யப்பட்டது. அண்மையில் பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில செயலாளரான ஹரீஷ் கைது செய்யப்பட்டார். அத்துடன் நிறுவனத்தின் மற்றொரு நிர்வாகியான மாலதியும் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பலர் தொடர்ந்து கைதாகி வந்தனர். இந்த நிலையில் இதுவரை 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஸ்கர்
இதில் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜ் ஆகியோரும் அடங்குவர். மேலும் ஐயப்பன், நடிகர் ரூசோ, ராஜசேகர் ஆகியோரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் பகுதியில் ஏஜென்ட்டாக செயல்பட்டு வந்தவர் ரூசோ. ரூசோ ஐஏஎஸ் பயிற்சி அகாதெமியையும் நடத்தி வந்துள்ளார். இவர் சொகுசு கார்களை வாங்கியதும் ரூ 10 கோடி மதிப்பீட்டில் புதிய வீடு கட்டியதும் தெரியவந்தது. இவர் ஆர்.கே.சுரேஷ் இயக்கும் படத்தை தயாரித்து அந்த படத்தில் போலீஸ் எஸ்பி வேடத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார். ஆனால் அந்த படம் முடிவடையவில்லை.

மோசடி பணம்
ரூசோ விசாரணையில் மத்திய அரசில் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க ஆர்.கே.சுரேஷ் தன்னிடம் இருந்து 12 கோடி ரூபாய் வாங்கியதாக ரூசோ வாக்குமூலம் அளித்துள்ளாராம். இது குறித்து விசாரணை நடத்த ஆர்.கே.சுரேஷை காவல் துறையினரை தொடர்பு கொண்டனர். ஆனால் அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளதாம். இதையடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆர்.கே.சுரேஷ் துபாய் தப்பிச் சென்றதாகவும் கடந்த இரு மாதங்களாக அவர் இந்தியாவில் இல்லை என்றும் தெரிகிறது. விசாரணைக்கு ஆர்.கே.சுரேஷ் ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி விசாரணைக்கு உள்படுத்த போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.
-
நிதிஷ்குமார் முதல்வர் பதவி காலி.. ஆரம்பித்த பாஜக! அதிமுகவுக்கு அச்சம்.. எடப்பாடிக்கும் இதே கதி தானா! -
கோவை பீளமேடு விமான நிலையம் அருகே! கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு! -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை












Click it and Unblock the Notifications