ரிப்போர்ட் இருக்கு வேணுமா? காதால் கூட கேட்க முடியவில்லை.. கொதிக்கும் அன்னபூரணி.. என்ன சொன்னார்?
சென்னை: அன்னபூரணி குறித்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில் தனது இரண்டாவது கணவர் அரசுவின் மரணம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆதிபராசக்தி அம்மா அவதாரம் என்ற பெயரில் அன்னபூரணி என்ற பெண் செங்கல்பட்டில் அருள்வாக்கு வழங்கி வந்தார். இந்த நிலையில் ஜனவரி 1ம் தேதி நடக்க இருந்த அன்னபூரணியின் அவதார அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.
இவரின் அருள்வாக்கு வீடியோக்கள் இணையத்தில் பரவி சர்ச்சையானது. பல்வேறு இந்து அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இவரின் இரண்டாவது கணவர் அரசு மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

பேட்டி
இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனமான பிஹைண்ட் வுட்ஸ் நிறுவனத்திற்கு அன்னபூரணி அளித்த சிறப்பு பேட்டியில், என்னுடைய கணவர் அரசு மர்மமான முறையில் மரணம் அடையவில்லை. அவரின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கூட என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு தேவைப்பட்டால் அந்த ரிப்போர்ட்டை கொடுக்க கூட தயார்.

கணவர் மரணம்
என்னை பற்றி தவறாக பேசுவதை நிறுத்துங்கள். அவருக்காக வைக்கப்பட்ட சிலை இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் இடத்தை விற்பனை செய்ய முடியவில்லை. சிலை இருப்பதால் அதை பலர் வாங்கவில்லை.

அன்னபூரணி
இதனால் அங்கு இருக்கும் சிலையை அகற்றும்படி நான்தான் கோரிக்கை விடுத்தேன். சிலையை எடுத்துவிடலாம் என்று நான் கூறிய பின்புதான் சிலை அகற்றப்பட்டது. இதை பற்றி தவறான செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இப்போது அந்த சிலை அகற்றப்பட்டு நிலத்தை விற்பனை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

அன்னபூரணி அரசு சிலை
இது தொடர்பாக காதில் கேட்க முடியாத வதந்திகள் பரவி வருகின்றன. நானும் அரசும் நெருக்கமாக வாழ்ந்தோம். அவர் இப்போது என்னுடன் ஒளியாக இணைந்துவிட்டார். என்னுடைய பொண்ணுக்கு கூட நான் தனிப்பட்ட பர்சனல் டைம் தர முடியவில்லை.
Recommended Video

ஆன்மீகம்
என்னுடைய பயிற்சிக்கு வருபவர்களுக்குதான் நான் நேரம் ஒதுக்கி தருகிறேன். தனிப்பட்ட பர்சனல் விஷயங்களை செய்ய முடிவதே இல்லை. எனக்கு சுயநலமே இல்லை. நான் ஆன்மீக பணியில் இருக்கிறேன்., என்று அன்னபூரணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications