Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்போ தும்முனா தான் சரியா இருக்கும்! சத்தமில்லாமல் உயர்ந்த ஆவின் ஐஸ்கிரீம் விலை! சொல்லவே இல்லையே?!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆவின் நிறுவனம் பால் பொருட்கள் தயாரிப்போடு ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் ஆவினில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றின் விலை திடீரென உயர்த்தப்பட்டிருப்பதாகவும், ஒன்றாம் தேதி முதலே இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழக அரசு பால்வளத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை தமிழகம் முழுவதும் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இதற்காக பல தொழிற்சாலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது.

aavin tamilnadu govt bussiness

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் எனவும் இது அழைக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான லிட்டர் பால் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏராளமான தனியார் பால் நிறுவனங்கள் பெருகி விட்டாலும், தற்போது கூட சென்னை போன்ற நகர் பகுதிகளில் ஆவின் பால் இல்லையென்றால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு மக்கள் இன்னல்களை சந்திக்க நேரிடும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆவின் பால். உற்பத்தியாளர்களிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் ஆவின் நிலையங்களில் பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகியவை ஆவின் நிறுவனம் மூலம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ஆரஞ்சு, நீலம், பச்சை, பழுப்பு உள்ளிட்ட நிறங்களில் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் ஆவின் நெய், பன்னீர், வெண்ணெய், இனிப்பு வகைகள் என பால் பொருட்களும் ஆவின் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சுகாதாரமான முறையில் குறைந்த விலையில் ஆவின் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நேரடியாகவும் முகவர்கள் மூலமாகவும் ஐஸ்கிரீம் பால் உள்ளிட்டவை ஆவின் பாலகங்களிலும் தனியார் விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ஆவின் ஐஸ்கிரீமின் விலை திடீரென உயர்த்தப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் மூன்று ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை விலை உயர்வு இருக்கும் நிலையில் கடந்த ஒன்றாம் தேதியே இந்த விலை உயர்வு அமலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், 25மிலி மினி குல்பி 12.00 ரூபாயில் இருந்து 15.00 ரூபாயாகவும், 50மிலி வெண்ணிலா, மேங்கோ, ஸ்டாபெர்ரி வகைகள் 10.00 ரூபாயில் இருந்து 15.00 ரூபாயாகவும், சாக்லேட், பிஸ்தா வகைகள் 12.00 ரூபாயில் இருந்து 18.00 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளன.

500 மிலி லவ்லி லிட்சி, ஸ்டாபெர்ரி, சாக்லேட், பட்டர் ஸ்காட்ச் வகைகள் 125.00 ரூபாயில் இருந்து 200.00 ரூபாயாகவும், ப்ளாக் கரண்ட் ப்ளாஸ்ட் 135.00 ரூபாயில் இருந்து 200.00 ரூபாயாகவும், சாக்லேட் மேனியா, ஸ்டாபெர்ரி 145.00 ரூபாயில் இருந்து 200.00 ரூபாயாகவும், பிஸ்தா பேஷன் 170.00 ரூபாயில் இருந்து 240.00 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், 500 மிலி வெண்ணிலா 75.00 ரூபாயில் இருந்து 120.00 ரூபாயாகவும், மேங்கோ, ஸ்டாபெர்ரி 95.00 ரூபாயில் இருந்து 140.00 ரூபாயாகவும், சாக்லேட், பிஸ்தா, பாதாம், பட்டர் ஸ்காட்ச் 95.00 ரூபாயில் இருந்து 140.00 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.

1000 மிலி வெண்ணிலா, மேங்கோ, பட்டர் ஸ்காட்ச் 150.00 ரூபாயில் இருந்து 220.00 ரூபாயாகவும், சாக்லேட் 170.00 ரூபாயில் இருந்து 250.00 ரூபாயாகவும், பிஸ்தா 175.00 ரூபாயில் இருந்து 250.00 ரூபாயாகவும், பாதாம், பட்டர் ஸ்காட்ச் 180.00 ரூபாயில் இருந்து 250 ரூபாயாகவும் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கு பயன்படும் வகையிலான 4500மிலி Bulk ஐஸ்கிரீம் வகைகள் 80.00 ரூபாய் முதல் 100.00 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை விலை உயர்வு 01.10.2024 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+