ஆவினே இப்படி செய்தால் எப்படி.. ஏற்கனவே கரண்ட் பில் ஷாக்.. ஜி.கே. வாசன் ஆதங்கம்.. முக்கிய வேண்டுகோள்
ஆவின் பொருட்களுக்கான விலை உயர்வை நீக்க வேண்டும் என்று வாசன் கோரியுள்ளார்
சென்னை: ஆவின் பொருட்களின் விலை உயர்வை, தமாகா தலைவர் ஜிகே வாசன் கண்டித்துள்ளார்.. உடனடியாக விலைஉயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஆவின் நிறுவனம் ஆவின் பொருட்களுக்கான விலையை உயர்தியது.. எனினும் தற்போது, மேலும் விலையேற்றத்தை அறிவித்துள்ளது.
பல தனியார் நிறுவனங்கள் தயிர், லஸ்சி, மோர் ஆகியவற்றின் விலையை ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்த்தி உள்ள நிலையில் ஆவினும் உயர்த்திவிட்டது.. நெய்யின் விலை ரூ.5 ல் இருந்து ரூ .45 வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது..

வாய்ப்பில்லை
சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.. அரிசிக்கும் ஜிஎஸ்டி விதித்ததையடுத்து, பால் பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டது அதிருப்தியை கிளப்பியது.. அப்போது, ஆவின் பொருள்களின் விலையும் உயருமா என்று பால் வளத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.. விலை உயர்த்தும் வாய்ப்பில்லை என்று அமைச்சரும் கூறியிருந்த நிலையில், ஆவின் பொருள்களின் விலை உயர்வு என்ற அறிவிப்பு வெளியாகியது.

லஸ்ஸி விலை
ஆவின் தன்னுடைய உபபொருட்களின் விலைகளை உயர்த்தி அறிவித்திருந்த நிலையில், இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.. தயிர் அரை லிட்டர் ரூ.30-லிருந்து ரூ.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராம் தயிர், ரூ.10-லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.பிரீமியம் தயிர் ரூ.100 லிருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புரோபயாடிக் லஸ்ஸி ரூ.27-ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 200 மில்லி மோர் ரூ.10லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் ஆவின் பாலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசன் அறிக்கை
இந்நிலையில், தமாகா தலைவர் வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் ஆவின் நிறுவனம் , நெய் , தயிர் மற்றும் பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தான் ஆவின் நிறுவனம் ஆவின் பொருட்களுக்கு விலையேற்றம் செய்தது. ஆனால் குறுகிய காலத்திற்குள் மேலும் விலையேற்றத்தை அறிவித்துள்ளது ஏழை , எளிய மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது . ஏழை, எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், அத்தியாவசிய பொருட்களாக இருக்கும் தயிர் மற்றும் நெய்யின் விலை ரூ.5 ல் இருந்து ரூ.45 வரை உயர்த்தியுள்ளது மக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

சுமைகள்
பொருளாதார ரீதியில் இவ்வேளையில் தமிழக அரசு, மின்கட்டணத்தை உயர்த்தியும் ஏழை மக்கள் மீது விலையேற்றியும், மென்மேலும் சுமையை ஏற்றுகிறது . சிரமப்படும் அரசு நிறுவனமான ஆவினே விலையேற்றும் செய்யும் பொழுது தனியார் நிறுவனங்களும், அவர்களது பொருட்களுக்கு பொருட்களுக்கு மேலும் விலையேற்றம் செய்ய மிகுந்த வாய்ப்புள்ளது. எனவே ஏழை, எளிய மக்களின் நலன் கருதி ஆவின் நிறுவனம் அறிவித்த விலையேற்றத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று வாசன் குறிப்பிட்டுள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications