Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆவினே இப்படி செய்தால் எப்படி.. ஏற்கனவே கரண்ட் பில் ஷாக்.. ஜி.கே. வாசன் ஆதங்கம்.. முக்கிய வேண்டுகோள்

ஆவின் பொருட்களுக்கான விலை உயர்வை நீக்க வேண்டும் என்று வாசன் கோரியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவின் பொருட்களின் விலை உயர்வை, தமாகா தலைவர் ஜிகே வாசன் கண்டித்துள்ளார்.. உடனடியாக விலைஉயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஆவின் நிறுவனம் ஆவின் பொருட்களுக்கான விலையை உயர்தியது.. எனினும் தற்போது, மேலும் விலையேற்றத்தை அறிவித்துள்ளது.

பல தனியார் நிறுவனங்கள் தயிர், லஸ்சி, மோர் ஆகியவற்றின் விலையை ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்த்தி உள்ள நிலையில் ஆவினும் உயர்த்திவிட்டது.. நெய்யின் விலை ரூ.5 ல் இருந்து ரூ .45 வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது..

 வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.. அரிசிக்கும் ஜிஎஸ்டி விதித்ததையடுத்து, பால் பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டது அதிருப்தியை கிளப்பியது.. அப்போது, ஆவின் பொருள்களின் விலையும் உயருமா என்று பால் வளத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.. விலை உயர்த்தும் வாய்ப்பில்லை என்று அமைச்சரும் கூறியிருந்த நிலையில், ஆவின் பொருள்களின் விலை உயர்வு என்ற அறிவிப்பு வெளியாகியது.

 லஸ்ஸி விலை

லஸ்ஸி விலை

ஆவின் தன்னுடைய உபபொருட்களின் விலைகளை உயர்த்தி அறிவித்திருந்த நிலையில், இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.. தயிர் அரை லிட்டர் ரூ.30-லிருந்து ரூ.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராம் தயிர், ரூ.10-லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.பிரீமியம் தயிர் ரூ.100 லிருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புரோபயாடிக் லஸ்ஸி ரூ.27-ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 200 மில்லி மோர் ரூ.10லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் ஆவின் பாலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வாசன் அறிக்கை

வாசன் அறிக்கை

இந்நிலையில், தமாகா தலைவர் வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் ஆவின் நிறுவனம் , நெய் , தயிர் மற்றும் பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தான் ஆவின் நிறுவனம் ஆவின் பொருட்களுக்கு விலையேற்றம் செய்தது. ஆனால் குறுகிய காலத்திற்குள் மேலும் விலையேற்றத்தை அறிவித்துள்ளது ஏழை , எளிய மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது . ஏழை, எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், அத்தியாவசிய பொருட்களாக இருக்கும் தயிர் மற்றும் நெய்யின் விலை ரூ.5 ல் இருந்து ரூ.45 வரை உயர்த்தியுள்ளது மக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

சுமைகள்

சுமைகள்

பொருளாதார ரீதியில் இவ்வேளையில் தமிழக அரசு, மின்கட்டணத்தை உயர்த்தியும் ஏழை மக்கள் மீது விலையேற்றியும், மென்மேலும் சுமையை ஏற்றுகிறது . சிரமப்படும் அரசு நிறுவனமான ஆவினே விலையேற்றும் செய்யும் பொழுது தனியார் நிறுவனங்களும், அவர்களது பொருட்களுக்கு பொருட்களுக்கு மேலும் விலையேற்றம் செய்ய மிகுந்த வாய்ப்புள்ளது. எனவே ஏழை, எளிய மக்களின் நலன் கருதி ஆவின் நிறுவனம் அறிவித்த விலையேற்றத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என்று வாசன் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+