இது நல்ல ஐடியாவாக இருக்கே! கூட்டுறவுத்துறை வட்டியில்லா வாரக்கடன் தரணும்! சட்டசபையில் புதிய கோரிக்கை!
சென்னை: கூட்டுறவுத்துறை சார்பில் வட்டியில்லா வாரக்கடன் வழங்க வேண்டும் என சட்டசபையில் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கேள்வி நேரத்தின் போது பேசிய மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி கடை நடத்துபவர்களின் நிலை குறித்து சில விவரங்களை எடுத்துரைத்தார்.

கந்துவட்டிக்காரர்களிடம் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கடனாக பெற்று வியாபாரம் செய்யும் இந்த சிறு வியாபாரிகள், தங்களுக்கு கிடைக்கும் லாபம் முழுவதையும் கந்துவட்டிகாரர்களுக்கு கொடுத்து விடுவதாக பரிதாபம் தெரிவித்தார்.
தமிழக அரசை பொறுத்தவரை பல விவகாரங்களில் நாட்டிற்கே முன்னுதாரணமாக செயல்பட்டு வரும் நிலையில், வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் கடனுதவி அளிப்பதிலும் மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக திகழ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதன் அடிப்படையில் சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி கடை நடத்துபவர்கள், என சிறிய அளவில் பிழைப்பு நடத்துபவர்களுக்கு கூட்டுறவ்வுத்துறை சார்பில் வட்டியில்லா வாரக்கடன் வழங்க வேண்டும் என்ற யோசனையை முன் வைத்தார்.
வட்டியில்லா வாரக்கடன் திட்டத்தின் மூலம் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கடன் வழங்கினால் சிறு வியாபாரிகளும் முன்னேற்றம் அடைய வழிவகை செய்யலாம் என எடுத்துக் கூறினார்.

அப்துக் சமது எம்.எல்.ஏ.வின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், வட்டியில்லா வாரக்கடன் தருவது பற்றி கூட்டுறவுத்துறை சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் ஏனெனில் பொதுமக்களின், விவசாயிகளின் வைப்புத் தொகையை வைத்தும் அதற்கு வட்டி கொடுக்க வேண்டிய நிலையிலும் தான் கூட்டுறவுத்துறை வங்கிகள் இயங்கி வருவதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினிடத்தில் இந்தக் கோரிக்கையை வைத்து அவர் உத்தரவிட்டார் என்றால், அதற்கேற்ப அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications