பொன்.மாணிக்கவேலுக்கு பதிலாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்
Recommended Video

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் ஏடிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி, அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூரில் காகித நிறுவனத்தில் கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வரும், அபய் குமார் சிங், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 28 ஆண்டுகளில் சுமார் 300 சிலைகளை மட்டும் தான் கண்டுபிடித்தனர். ஆனால் சிலை தடுப்பு பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேல் பதவியேற்ற பிறகு சுமார் 1,146 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பொன்.மாணிக்கவேல் தனது உயர் அதிகாரிகளை மதிக்கவில்லை என்று தமிழக அரசு குற்றம் சாட்டியது. சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால், உயர் நீதிமன்றம் இந்த வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்தநிலையில் பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அவர் ஓய்வு பெறும் நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு வழங்குவதில் தமிழக அரசு உறுதியாக இருந்த நிலையில் பொன்.மாணிக்கவேல் ஓய்வுபெறும்போது புதிதாக ஒரு அதிகாரியை நியமனம் செய்திருப்பதன் மூலம், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு வழங்கும் தனது முடிவில் தமிழக அரசு பின்வாங்கி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications