அபிநந்தன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மீண்டும் வர வேண்டும்.. தந்தை வர்த்தமான் பிரார்த்தனை
சென்னை: பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள விங் கமாண்டர் அபிநந்தன் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என பிரார்த்தனை செய்யுமாறு அவரது தந்தையும் முன்னாள் விமான படை அதிகாரியுமான சிம்மக்குட்டி வர்த்தமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் சுற்றித் திரிந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா விரட்டியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
அப்போது நடந்த சண்டையின்போது இந்தியாவின் மிக் ரக விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. அதில் அந்நாட்டு எல்லையில் விழுந்த விமானத்தின் விமானி அபிநந்தனை அந்நாடு பிடித்து வைத்துள்ளது.

இந்தியா
அவரை தாங்கள்தான் பிடித்து வைத்திருக்கிறோம் என்பதற்கான வீடியோவை அந்நாடு வெளியிட்டது. இந்த நிலையில் அவரை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.

மெசேஜ்
இந்த நிலையில் சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள அவரது குடும்பத்தினரை அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த சமயத்தில் அபிநந்தனின் தந்தை முன்னாள் ஏர் மார்ஷல் சிம்மக்குட்டி வர்த்தமான் ஒரு மெசேஜ் வெளியிட்டுள்ளார்.

ஆசிகள்
அதில் அவர் கூறுகையில் என் மகன் அபிநந்தன் மீண்டு வர வேண்டும் என்ற உங்களின் வாழ்த்துகளுக்கும் விசாரிப்புகளுக்கும் நன்றி. அபி உயிரோடும் எந்த காயங்களும் இன்றி அவரை ஆசிர்வதிக்கும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

பிரார்த்தனை
பாகிஸ்தானிடம் பிடிபட்டாலும் தைரியமாக பேசுகிறார். அவர் உண்மையான வீரர். அவரை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். அவர் பாதுகாப்பாக நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும் என நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்வீர்கள் என்பது எனக்கு தெரியும்.

நன்றி
அபி நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும். அவரை பாகிஸ்தான் துன்புறுத்தக் கூடாது. நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் அவர் மீண்டு வரவேண்டும். உங்கள் ஆதரவு மற்றும் ஊக்கத்தினால் நாங்கள் திடமாக இருக்கிறோம். அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications