பீகார் நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஒப்புதலா? தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகார் நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் என்ற தகவலை நம்ப வேண்டாம் என்றும் தனி நபருக்கு எதிரான எந்த தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையையும் ஆளுநர் அங்கீகரிக்கவில்லை எனவும் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பீகாரைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என சமூகவலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டு வருவதாக ஆளுநர் மாளிகை கவனத்துக்கு வந்துள்ளது.

Action for spreading false information on Bihar issue: TN Government office

அந்த தகவல் உண்மையல்ல. அதுபோன்று எந்தவொரு தனிநபருக்கும் எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.எனவே, இதுபோன்ற தவறான தகவல்களை பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+