சென்னையில் கொரோனாவை ஒழித்துக்கட்ட அதிரடி திட்டம்... இன்று முதல் அமல்
சென்னை: சென்னையில் வீடு தவறாமல் கொரோனா சோதனை நடத்தும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இது கொரோனாவை ஒழித்துக் கட்டுவதற்கான சூப்பர் திட்டமாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் சென்னையில் மட்டும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் சுகாதாரத்துறை தவித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா இல்லாத சென்னை என்ற முழக்கத்தை முன்வைத்து இன்று தொடங்கப்படும் கொரோனா சோதனை திட்டம் வீடு தவறாமல் மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை 85 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநகரம் என்பதால் இது மற்ற மாவட்டங்களை விட சற்று வித்தியாசமானது. அதேபோல் மக்கள் குடியிருப்புகளும் நெருக்கடியாக தான் இருக்கும்.
முதற்கட்டமாக தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு விக நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் டோர் டூ டோர் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. மைக்ரோ பிளான் மூலம் சோதனையை நடத்த இருக்கும் சுகாதாரத்துறை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுரக் குடிநீர் பொட்டலங்களையும் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும், சென்னை மாநகரம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்கள் மூலம் கபசுர குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சென்னை முழுவதும் பொதுமக்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் 10 நாட்களில் முடிவடையும் எனக் கூறப்படுகிறது. கொரோனா இல்லாத சென்னை என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தலைமையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications