இப்பவும் இந்த 6 மாவட்டங்களில் தான் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை கிடுகிடு--.. டேட்டா ரிப்போர்ட்
சென்னை: ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கோவிட் டேட்டா அனாலிஸ்ட் விஜயானந்த் தெரிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எங்கு அதிகமாக உள்ளது. எங்கு குறைவாக உள்ளது. எங்கு அதிக ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
அதில் உள்ள தகவலின் படி, கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை, மற்ற மாவட்டங்களைவிட மிக அதிகமாக உள்ளது. சென்னையில் அதிகமாக இருந்தாலும் கடந்த ஒரு வாரமாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
|
திருப்பூர்
கோவையில் 40570 நோயாளிகளும், திருப்பூரில் 18594 நோயாளிகளும், ஈரோட்டில் 16093 நோயாளிகளும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். திருச்சியில் 11013 நோயாளிகளும், சேலத்தில் 8762 நோயாளிகளும், நாமக்கல்லில் 7285 நோயாளிகளும் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் மேலே சொன்ன 6 மாவட்டங்களில் தான் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் குறைந்து வருகிறது.

சேலத்தில் எவ்வளவு
ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நோயாளிகள் எண்ணிக்கை மட்டுமல்ல, தினசரி பாதிப்பும் அதிகமாக உள்ளது. ஈரோடில் 1653 பேருக்கும், திருப்பூரில் 1338 பேருக்கும், சேலத்தில் 1140 பேருக்கும், திருச்சியில் 987 பேருக்கும், நாமக்கல்லில் 914 பேருக்கும், கோவையில் 3332 பேருக்கும் தொற்று பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் அதிகம்
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும் போது தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகளின் சதவீதம் ஒன்று அல்லது 2 அல்லது 3 சதவீதம் என்கிற அளவில் தான் உள்ளது. ஆனால் கோவையில் 13 சதவீதமும், அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 8 சதவீதம் , ஈரோட்டில் 6 சதவீதம் நோயாளிகளும், திருப்பூரில் 5 சதவீதமும், செங்கல்பட்டில் 4 சதவீதமும், திருச்சியில் 4 சதவீதமும் நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளது.

காஞ்சிபுரம்
நாமக்கல் 3 சதவீதம், தஞ்சாவூரில் 3 சதவீதம், கன்னியாகுமரியில் 3 சதவீதம், திருவள்ளூரில் 3 சதவீதம் ஆக நோயாளிகள் எண்ணிக்கை உள்ளது, மதுரையில் 2 சதவீதம் , விருதுநகரில் 2 சதவீதம், நீலகிரியில் 2 சதவீதம், தூத்துக்குடியில் 2 சதவீதம், கடலூரில் 2 சதவீதம், திருவாரூரில் 2சதவீதம், தேனியில் 2 சதவீதம், காஞ்சிபுரத்திலும் 2சதவீதம் ஆக உள்ளது, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கரூர், வேலூரிலும் 2 சதவீதம் அளவிற்கே கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உள்ளதாக கோவிட் டேட்டா அனலிஸ்ட் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications