இனிமே பெட்ரோல், டீசல் விலை அடியோடு குறையும்.. வருகிறது எத்தனால் கலப்பு.. மோடி எடுத்த முக்கிய முடிவு
சென்னை: அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை மத்திய அரசு நெருங்கி வருகிறது. இதோ புதிதாக தற்போது டீசலில் 5% எத்தனாலை (ED-5) கலக்கும் புதிய திட்டத்தை அரசாங்கம் கையில் எடுத்துள்ளது.
பிரதமர் மோடி இது தொடர்பாக கடந்த வாரம் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களுடனும் புதிய திட்டம் குறித்து ஒரு கூட்டத்தை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூன் மாதத்தில், பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது 15.9% ஆக இருந்தது. டீசலில் எத்தனாலைக் கலப்பதற்குத் தேவையான தொழிற்சாலை ஒன்றை அரசாங்கம் கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

டீசலில் எத்தனால் கலப்பதால் செலவு குறையம். மைலேஜ் மாற்றம் அடையாது. அது சுற்றுச்சூழலுக்கு நல்லது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தும். இதனால் பெட்ரோல் ; டீசல் விலை குறையும். பொதுவாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரித்து பொருட்களின் விலை குறையும்.
இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) 2018-19 இது தொடர்பாக சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. எத்தனால் கலந்த எரிபொருள் மூலம் BS-III மற்றும் BS-VI பேருந்துகளில் வாகன செயல்திறன், உமிழ்வு மற்றும் ஆயுள் ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக சோதனை செய்யப்பட்டது. 500 மணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில் பெரிய தோல்வி, பிரச்சனை எதுவும் பதிவாகவில்லை. எரிபொருள் நுகர்வு சாதாரண டீசலை விட சற்றே குறைவாக இருந்ததை பைலட் திட்டத்தில் கண்டறிந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், எத்தனால் கலந்த டீசலின் சோதனை இதுவரை BS-VI வாகனங்களில் செய்யப்படவில்லை. எண்ணெய் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பாக கனரக வாகனத்தில் எரிபொருளின் சோதனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். டீசலுடன் எத்தனால் கலப்பது சோதனை நிலையில் இருப்பதாகவும், விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என்றும் அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
விலை உயர்வு; சமீபத்தில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.92.50 குறைக்கப்பட்டு ரூ.1,929.50-க்கு விற்பனை செய்யப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்று சென்னையில் ரூ.918.50-க்கு விற்பனை ஆகிறது.
சமீபத்தில்தான் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் அதாவது 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.1118ல் இருந்து 918க்கு விலை குறைந்தது.
பெட்ரோல் விலை: இந்த கேஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து விரைவில் பெட்ரோல், டீசல் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியாவில் கடந்த வருடம் பாதி வரை பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது.
நாளுக்கு நாள் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் தானாக போக்குவரத்து செலவும் உயரும். இதுவே பணவீக்கத்திற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது. மே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 வருடங்களில் இதுதான் மிக அதிகம் ஆகும்.
மக்கள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டது.
அதன்பின் ஒன்றரை வருடமாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 96.35 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 89.52 க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை லிட்டர் 101.94 ரூபாயை தாண்டி உள்ளது. டீசல் விலை 87.89 ரூபாயை தாண்டி உள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications