Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாயின் ஆசையை நிறைவேற்றிய டேனியல் பாலாஜி.. ஆவடியில் சொந்த செலவில் கட்டிய அங்காள பரமேஸ்வரி கோயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த ஆவடி அருகில் அங்காள பரமேஸ்வரிக்கு கோயில் கட்டியுள்ளார் டேனியல் பாலாஜி.

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் டேனியல் பாலாஜி. தனது குரலால் அனைவரையும் நடுங்க வைத்தவர். இவர் மருதநாயகம் படத்தின் புரொடெக்ஷன் மேனேஜராக இருந்து பின்னர் சித்தி சீரியலில் நடித்தார்.

Actor Daniel Balaji built a temple at Avadi Chennai

இதன் மூலம் டேனியல் என்ற அடைமொழி அவரது பெயர் பாலாஜியுடன் ஒட்டிக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பொல்லாதவன், பைரவா, வேட்டையாடு விளையாடு, கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் சென்னையில் ஆவடி அருகே உள்ள போலீஸ் செக் போஸ்ட் அருகே ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கட்டியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு இந்த கோயிலை கட்டத் தொடங்கி, இந்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி கும்பாபிஷேகத்தையும் டேனியல் பாலாஜி நடத்தி முடித்தார். தனது அம்மாவின் ஆசைக்காக டேனியல் பாலாஜி இந்த கோயிலை கட்டியிருந்தார்.

இது பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த கோயிலை எப்படி கட்டினார் என்பது குறித்து டேனியல் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறுகையில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. கட்டுவதற்கு முன்பு கோயில்கள் வரலாறு பற்றி நான் தெரிந்து கொண்டேன்.

கோயில்களை பொருத்தமட்டில் சவுண்ட் எனர்ஜி என்பது முக்கியமானது. எனவே இந்த அங்காள பரமேஸ்வரி கோயிலிலும் அந்த வசதி செய்யப்பட்டுள்ளது. சிறு வயதில் இருந்தே எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆயினும் நான் கடவுளிடம் எப்போதும் வேண்டியதில்லை.

கடவுள் எப்போது என் கூட இருக்க வேண்டும் ென்று மட்டுமே நான் ஆசைப்பட்டேன். கோயில் கட்டும் பணிகளின் போது நான் நேரடியாக ஈடுபட்டதற்கான காரணம் எனக்கு இருக்கும் ரசனைதான். என்னுடைய இறைத்தாய்க்கு நான் கட்டிக் கொடுத்த வீடுதான் இந்த கோயில்.

கடவுளுக்கு என்னுடைய நன்றிக் கடன்தான் இந்த கோயில் .எனக்கு இதுவரை கிடைத்த உயரங்கள் எதுவும் நான் எதிர்பார்க்காதவை. நான் எது செய்தாலும் அந்த பணியின் மீது மட்டும் என் கவனம் இருக்கும். அந்த பணியால் நான் பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருக்காது. ஆனாலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும்.

மனதார நாம் நம்பும் விஷயங்கள் நிச்சயம் நடக்கும். அனைத்தையும் வாய் விட்டு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வேண்டுதலுக்கென்று தனியாக எந்த முறையும் இல்லை. எதிலும் நம்பிக்கை வேண்டும். அது கண்மூடித்தனமானதாக இருந்தாலும் பரவாயில்லை. கோயிலில் சற்றஉ நேரம் அமைதியாக இருந்தாலே போதும் பல நன்மைகள் கிடைக்கும். கோயிலுக்கு நிம்மதியுடன் வந்து நிம்மதியாகச் செல்லுங்கள். மனம் அமைதியடையும் வாழ்வில் நன்மை கிடைக்கும் என தெரிவித்திருந்தார் டேனியல் பாலாஜி.

அப்படிப்பட்ட டேனியல் பாலாஜி நேற்று இரவு இறைவனடி சேர்ந்தார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொட்டிவாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. காலை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கோயில், ஆன்மீகம் என இருந்த டேனியல் பாலாஜிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+