Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே போட்டோ.. நடிகர் பிரகாஷ் ராஜ் நச்! அட இப்டி யாரும் யோசிக்கலயே - இதான் புதிய இந்தியாவோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த இந்திய நினைவு சின்னம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில், அதை ஒற்றை புகைப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடம் டெல்லியில் ரூ.971 கோடி ரூபாய் மதிப்பில் 62,000 சதுர மீட்டரில் முக்கோண வடிவில் கட்டப்பட்டு வருகிறது.

மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும், கூட்டு கூட்டத்திற்கு 1,272 உறுப்பினர்களும் அமரும் வகையில் பிரம்மாண்டமாக இந்த கட்டிடம் கட்டப்படுகிறது.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

நில அதிர்வுகளையும் தாங்கும் வகையில் கட்டப்படும் இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள 9,500 கிலோ எடையில் தேசிய நினைவு சின்னத்தின் வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. கடந்த 11-ந் தேதி இந்த தேசிய நினைவு சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அசோக சக்கரத்துடன் 4 சிங்கங்கள் நிற்பது போன்ற தேசிய சின்னத்தில் பல்வேறு மாறுபாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடின.

 தேசிய நினைவு சின்னம்

தேசிய நினைவு சின்னம்

புதிய சின்னம் மாற்றியமைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. தேசிய நினைவு சின்னத்தில் உள்ள சிங்கங்கள் கம்பீரமாகவும், கச்சிதமான வடிவமைப்போடும் இருக்கும் என்றும், தற்போது நரேந்திர மோடி திறந்து வைத்த சிலையில் சிங்கங்கள் வாயை திறந்து ஆக்ரோசமாக இருப்பதுடன், தேசிய நினைவு சின்னத்தையே பிரதிபலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 எதை நோக்கி செல்கிறோம்?

எதை நோக்கி செல்கிறோம்?

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு தரப்பில் பெரிதாக விளக்கங்கள் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ் பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் திறந்து வைத்த தேசிய நினைவு சின்ன சிலை குறித்து ஒற்றை புகைப்படத்தில் விமர்சனம் செய்து இருக்கிறார். அன்றும் இன்றும் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டு, நாம் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்று பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரகாஷ் ராஜின் ஒப்பீடு

பிரகாஷ் ராஜின் ஒப்பீடு

அந்த படத்தில் அன்று பயன்படுத்தப்பட்ட சாந்தமாக இருக்கும் ராமர் படத்தையும், இன்று பயன்படுத்தப்படும் ஆக்கிரோஷமாக இருக்கும் ராமர் படத்தையும் அவர் ஒப்பிட்டு உள்ளார். அதேபோல், சாந்தமாக இருக்கும் அனுமன் படத்தையும், இன்று பயன்படுத்தப்படும் ஆக்கிரோஷமான அனுமன் படத்தையும் அவர் ஒப்பிட்டு இருக்கிறார். அதேபோல், வழக்கமான தேசிய நினைவு சின்னத்துடன் மோடி திறந்துவைத்த ஆக்கிரோஷமான சிலையை அவர் ஒப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+