ஒரே போட்டோ.. நடிகர் பிரகாஷ் ராஜ் நச்! அட இப்டி யாரும் யோசிக்கலயே - இதான் புதிய இந்தியாவோ
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த இந்திய நினைவு சின்னம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில், அதை ஒற்றை புகைப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடம் டெல்லியில் ரூ.971 கோடி ரூபாய் மதிப்பில் 62,000 சதுர மீட்டரில் முக்கோண வடிவில் கட்டப்பட்டு வருகிறது.
மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும், கூட்டு கூட்டத்திற்கு 1,272 உறுப்பினர்களும் அமரும் வகையில் பிரம்மாண்டமாக இந்த கட்டிடம் கட்டப்படுகிறது.

நாடாளுமன்றம்
நில அதிர்வுகளையும் தாங்கும் வகையில் கட்டப்படும் இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள 9,500 கிலோ எடையில் தேசிய நினைவு சின்னத்தின் வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. கடந்த 11-ந் தேதி இந்த தேசிய நினைவு சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அசோக சக்கரத்துடன் 4 சிங்கங்கள் நிற்பது போன்ற தேசிய சின்னத்தில் பல்வேறு மாறுபாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடின.

தேசிய நினைவு சின்னம்
புதிய சின்னம் மாற்றியமைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. தேசிய நினைவு சின்னத்தில் உள்ள சிங்கங்கள் கம்பீரமாகவும், கச்சிதமான வடிவமைப்போடும் இருக்கும் என்றும், தற்போது நரேந்திர மோடி திறந்து வைத்த சிலையில் சிங்கங்கள் வாயை திறந்து ஆக்ரோசமாக இருப்பதுடன், தேசிய நினைவு சின்னத்தையே பிரதிபலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எதை நோக்கி செல்கிறோம்?
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு தரப்பில் பெரிதாக விளக்கங்கள் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ் பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் திறந்து வைத்த தேசிய நினைவு சின்ன சிலை குறித்து ஒற்றை புகைப்படத்தில் விமர்சனம் செய்து இருக்கிறார். அன்றும் இன்றும் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டு, நாம் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்று பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரகாஷ் ராஜின் ஒப்பீடு
அந்த படத்தில் அன்று பயன்படுத்தப்பட்ட சாந்தமாக இருக்கும் ராமர் படத்தையும், இன்று பயன்படுத்தப்படும் ஆக்கிரோஷமாக இருக்கும் ராமர் படத்தையும் அவர் ஒப்பிட்டு உள்ளார். அதேபோல், சாந்தமாக இருக்கும் அனுமன் படத்தையும், இன்று பயன்படுத்தப்படும் ஆக்கிரோஷமான அனுமன் படத்தையும் அவர் ஒப்பிட்டு இருக்கிறார். அதேபோல், வழக்கமான தேசிய நினைவு சின்னத்துடன் மோடி திறந்துவைத்த ஆக்கிரோஷமான சிலையை அவர் ஒப்பிட்டுள்ளார்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications