கலைஞர் இருக்கும் வரை வாலாட்ட முடியலயே..அவருக்கு அப்பறம் ஸ்டாலின் தான்! பிரகாஷ் ராஜ் பளிச்..!
சென்னை: கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை.. கலைஞர் இருக்கும் வரை எவராலும் வாலாட்ட முடியவில்லை என்றும், 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக போராடி வரும் நிலையில் எப்போதோ 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் கலைஞர் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக தரப்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபுவின் ஏற்பாட்டில் கலைஞரை மீண்டும் நேரில் சந்திப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் ’காலம் உள்ளவரை கலைஞர்’ என்ற கண்காட்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பிரகாஷ்ராஜ்: இந்த புகைப்பட கண்காட்சியை திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ,. தாயகம் கவி, பாடலாசிரியர் பா.விஜய் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ்ராஜ்,” பேச்சு வரவில்லை மனது 30 ஆண்டுகள் பின்னோக்கி செல்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்த போது இருந்த கலைஞர் ஞாபகத்திற்கு வருகிறார். கலைஞருடன் இருப்பது போலவே ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது அதை இன்றைய தொழில்நுட்பம் செய்துள்ளது. 2 வருடங்கள் கலைஞரை ஸ்டடி பண்ண வேண்டி இருந்தது.
கலைஞர் நூற்றாண்டு: கலைஞரின் வாழ்க்கையின் பயணத்தை என்னால் உணர முடிந்தது. இப்படி நான் இன்று பேசுகிறேன் என்றால் இப்படிப்பட்ட மனிதரை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உடனிருந்து ஸ்டடி செய்ததுதான் அதற்கு காரணம். சாதி அரசியலை பேசுகிறேன் என்கிறார்கள். கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் வரை எவரும் இங்கு வாலாட்ட முடியவில்லை. ஒரு நூற்றாண்டில் கலைஞரை கொண்டாடி வருகிறோம்.
நம்பர் 1 மாநிலம்: கலைஞர் இல்லை என்றால் இன்று நான் ஐஏஎஸ் ஆபிஸராக ஆகியிருக்க மாட்டேன் என்று ஒரு அதிகாரி சொல்கிறார். கலைஞருடன் நிறைய அனுபவங்கள் உள்ளது. கலைஞருக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் அவர் கொள்கைகளை சிந்தனையையும் உயிரோடு இருக்கிறது என்றால் நன்றி. இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.. இன்னும் முன்னேறும். கலைஞரின் விதை தமிழ்நாட்டின் மக்களுக்குள் உள்ளது
நரேந்திர மோடி: அது தான் இந்த மண் அழகாக உள்ளது, ஒரு போராளியின் நிலமாக உள்ளது. நிறைய சூட்டிங் பார்க்க மக்கள் வருவார்கள், ஆனால் கன்னியாகுமரி சூட்டிங் கீர்க்கு அவரே ஆடியன்ஸைக் கூட்டி செல்கிறார் தற்போதைய காலகட்டத்திற்கு கலைஞர் ஒருவரே போதும், அவரால் எத்தனை பேர் உயர்த்தப்பட்டார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும் அந்த கணக்கில் நாம் கலைஞரை பார்க்க வேண்டும். ஜூன் 4 முடிவு தோல்விக்கான அனைத்து வேலையும் மோடி செய்து விட்டார்.
முக ஸ்டாலின்: முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு நிறைய விஷயங்களை செய்து வருகிறார், வளர்ச்சி தெரிகிறது, யாரையும் எதிர்த்து பேச வேண்டிய துணிச்சல் இருக்கிறது, அது தான் தமிழ் நாட்டின் குரல் அடையாளம், ஒரு முதல்வரை அப்படி நிக்கும் பொழுது மக்களுக்கு நம்பிக்கை வருகிறது, ஸ்டாலின், ஆட்சியை நான் பாராட்டுகிறேன், எனக்கு தமிழ்நாட்டில் வீடு உள்ளது என்று நம்பிக்கை வருகிறது. அவனால் இங்கிருந்து நுழைய முடியவில்லை, என் செல்லத்தை ஒன்னும் செய்ய முடியாதுல்ல நாடு அப்படி இருக்கு. 4 ஆம் தேதிக்கு பிறகு மோடியும் சும்மாதான் இருப்பார் அவரையும் இங்கே இந்த கண்காட்சியை பார்க்க அழைக்கலாம்” என்றார்.
-
அமைச்சர் பதவி யாருக்கு? சீனியாரிட்டி எல்லாம் Secondary-தான்? மா.செ. கூட்டத்தில் சொன்ன ஸ்டாலின்? -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications