Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆருத்ரா மோசடி.. 4 மாதமாக தலைமறைவு நாகப்பாம்புவால் வசமாக சிக்குகிறாரா ஆர்.கே.சுரேஷ்? முக்கிய க்ளூ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் சிக்கிய ஆர்.கே.சுரேஷ் தற்போது டிவிட்டரில் நல்லப்பாம்பு படத்தை போட்டதால் டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி என ஆசைக்காட்டி முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ 2438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஆருத்ரா இயக்குநர்கள் உள்பட 21 பேரை கைது செய்தது.

Actor R.K.Suresh posted King Cobra imge in his twitter

இந்த வழக்கில் கைதான ரூசோவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் நடிகர், தயாரிப்பாளர், பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவராக உள்ள ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்புள்ளதாக தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் ஆர்.கே.சுரேஷின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் சம்மனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் படத்தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தன்னை அணுகினார் என்றும் அது தொடர்பாக மட்டுமே பணப்பரிவர்த்தனை நடந்தது. தனது மனைவியையும் குழந்தையையும் கவனித்து கொள்ள வெளிநாட்டில் இருப்பதாகவும் அதனால் நேரடியாக ஆஜராக முடியவில்லை என கோரியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கை ஏப்ரல் 28 ஆம் தேதி ஒத்தி வைத்த நீதிமன்றம் , ஆர்.கே. சுரேஷின் மனுவை ரத்து செய்தது.

மேலும் விமான நிலையங்களில் ஆர்.கே.சுரேஷ் மீது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அது போல் ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. ரூசோவிடம் சுரேஷ் ரூ 15 கோடி பணம் வாங்கியிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. இந்த நிலையில் திருச்சியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்திலும் ஆர்.கே. சுரேஷ் பண மோசடி செய்ததாக தெரியவந்தது. இதையும் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

Actor R.K.Suresh posted King Cobra imge in his twitter

இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நாகப்பாம்பு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 5 மாதங்களுக்கு பிறகு இவர் நாகப்பாம்பின் படத்தை இணையத்தில் பதிவிட்டுவிட்டு நீக்கிவிட்டார். நீண்ட நாட்களாக தலைமறைவாக இருக்கும் ஆர்.கே.சுரேஷின் இந்த நாகப்பாம்பு பதிவு சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் அந்த நாகப்பாம்பு ட்வீட் ஒரு ட்விஸ்டை ஏற்படுத்தியுள்ளது.

சுரேஷ் தலைமறைவான போது கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி சிவலிங்கம் படத்தை போட்டிருந்தார். அதன் பிறகு 108 நாட்கள் கழித்து நாகப்பாம்பு படத்தை போட்டுள்ளார் . இந்த ட்வீட்டை போட்டதும் அவர் டெலிட் செய்துவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+