ஆருத்ரா மோசடி.. 4 மாதமாக தலைமறைவு நாகப்பாம்புவால் வசமாக சிக்குகிறாரா ஆர்.கே.சுரேஷ்? முக்கிய க்ளூ?
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் சிக்கிய ஆர்.கே.சுரேஷ் தற்போது டிவிட்டரில் நல்லப்பாம்பு படத்தை போட்டதால் டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி என ஆசைக்காட்டி முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ 2438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஆருத்ரா இயக்குநர்கள் உள்பட 21 பேரை கைது செய்தது.

இந்த வழக்கில் கைதான ரூசோவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் நடிகர், தயாரிப்பாளர், பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவராக உள்ள ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்புள்ளதாக தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் ஆர்.கே.சுரேஷின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் சம்மனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் படத்தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தன்னை அணுகினார் என்றும் அது தொடர்பாக மட்டுமே பணப்பரிவர்த்தனை நடந்தது. தனது மனைவியையும் குழந்தையையும் கவனித்து கொள்ள வெளிநாட்டில் இருப்பதாகவும் அதனால் நேரடியாக ஆஜராக முடியவில்லை என கோரியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கை ஏப்ரல் 28 ஆம் தேதி ஒத்தி வைத்த நீதிமன்றம் , ஆர்.கே. சுரேஷின் மனுவை ரத்து செய்தது.
மேலும் விமான நிலையங்களில் ஆர்.கே.சுரேஷ் மீது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அது போல் ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. ரூசோவிடம் சுரேஷ் ரூ 15 கோடி பணம் வாங்கியிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. இந்த நிலையில் திருச்சியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்திலும் ஆர்.கே. சுரேஷ் பண மோசடி செய்ததாக தெரியவந்தது. இதையும் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நாகப்பாம்பு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 5 மாதங்களுக்கு பிறகு இவர் நாகப்பாம்பின் படத்தை இணையத்தில் பதிவிட்டுவிட்டு நீக்கிவிட்டார். நீண்ட நாட்களாக தலைமறைவாக இருக்கும் ஆர்.கே.சுரேஷின் இந்த நாகப்பாம்பு பதிவு சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் அந்த நாகப்பாம்பு ட்வீட் ஒரு ட்விஸ்டை ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷ் தலைமறைவான போது கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி சிவலிங்கம் படத்தை போட்டிருந்தார். அதன் பிறகு 108 நாட்கள் கழித்து நாகப்பாம்பு படத்தை போட்டுள்ளார் . இந்த ட்வீட்டை போட்டதும் அவர் டெலிட் செய்துவிட்டார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications