திடீரென மயங்கி விழுந்த ரோபோ சங்கர்.. சூட்டிங்கில் திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி
சென்னை: நடிகர் ரோபோ சங்கருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பில் அவர் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ்பெற்றவர் ரோபோ சங்கர். அதன்பிறகு சினிமா வாய்ப்பு கிடைத்தது. நடிகர் தனுஷின் மாரி உள்பட பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து நடிகராக உயர்ந்தார் ரோபோ சங்கர்.

இந்நிலையில் தான் திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ரோபோ சங்கர் தற்போது சென்னையில் புதிய படப்பிடிப்பில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின்போது அவர் திடீரென்று மயங்கி உள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படப்பிடிப்பின்போது ரோபோ சங்கருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயங்கியதாக கூறப்படுகிறது. மருத்துமவமனையில் ரோபோ சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்று அவர் நலம் பெற்ற நிலையில் தற்போது மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது ரோபோ சங்கரின் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications